Sunday, August 9, 2020

 காங்கிரஸ் செய்வது சரியா?


இந்தியா முழுவதும் நடைபெற்று வரும் அரசியல் நிகழ்வுகளும், மத்திய அரசின் அவசர அவசரமான சட்ட நிறைவேற்றல்களும் இது வரை கடைப்பிடிக்கப்பட்டு வந்த ஜனநாயக நடைமுறைகள் மற்றும் உரிமைகளை அப்பட்டமாகப் பறிக்கும் போக்கையே வெளிப்படுத்துகின்றன. கொரோனாவால் நாடே ஒருபக்கம் அலைக்கழிக்கப்பட்டு 70% அடித்தட்டு மக்களின் வாழ்வு தலைகீழாகப் புரட்டி போடப்பட்டிருக்கிறது. பிரதமரின் வழக்கமான பொய்யுரைகளுக்கு அப்பால் உண்மை நிலை ஒவ்வொரு தளத்திலும் வெளிவரும் போது, அறிவிப்புகளின் ஆரவாரத் தன்மையும், தலைமையின் அரை வேக்காட்டு, ஆனால் பாசிச முகமும் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படத் துவங்கி உள்ளது. 


இடதுசாரிகள் தலைமை தாங்கும் கேரள அரசு எதிர் கொள்ளும் பிரச்சினைகள் மற்ற மாநிலங்களும் எதிர் கொள்கின்றன. ஆனால் கேரள அரசின் கையாளும் தன்மையை உலகமே வியந்து போற்றுகிறது. துவக்கத்தில் கொரோனாவால் கடுமையான பாதிப்பும், நோயாளிகள் எண்ணிக்கையும் மிக வேகமாக பரவிய நேரத்தில், வெளிநாடுகளில் இருந்து அதிகமாக கேரளாவுக்கு வந்திறங்கிய அம்மாநில மக்களால்தான் (பெரும்பாலும் இஸ்லாமிய மக்கள்) தொற்று பரவி விட்டது என்ற செய்தியை திட்டமிட்டு பரப்புரை செய்தவர்கள் யார் என்பதை மக்கள் அறிவார்கள். ஆனால் பரவிய வேகத்தைக் கட்டுப்படுத்தி ஒரு கட்டத்தில் முழுவதுமாக பாதிக்கப்பட்டவர்கள் இல்லை என்ற நிலையும் வந்தது. மீண்டும் சிறிய அளவிலான விமானப் போக்குவரத்து, வெளிநாடு வாழ் இந்தியர்கள் அந்தந்த நாடுகளில் சிக்கித் தவித்தபோது அவர்களை அழைத்து வருவதற்காக தொடங்கப்பட்டது. இதனாலும், உள்நாட்டில் வெளியூர்களில் இருந்த வேலைப் பாதுகாப்பற்ற மக்கள் சொந்த மண்ணுக்கு திரும்பத் தொடங்கியதாலும் தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை அதிகரித்தது. இது மற்ற மாநிலங்களிலும் பியதிபலித்தது. இந்தக் கட்டத்திலும் கேரள அரசு திறமையாக நிலைமையைச் சமாளித்தது. மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் ஊழல் பற்றிய விவாதங்கள் மற்ற மாநிலங்களின் ஊடகங்களில்  அனல் பறக்க நடைபெற்று வரும்போது கேரளா தலைநிமிர்ந்து நிற்கிறது. 


2017 ஆம் ஆண்டின் ஒக்கி புயல், தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாகப் பெய்த கடும் மழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள், 'நிபா' நோய்த்தொற்றால் ஏற்பட்ட பாதிப்பு ஆகியவைகளைத் தொடர்ந்து இன்று வரை கடும் சோதனைகள்!  இப்போதும் கடும் பருவமழையினால் மூணாறு பகுதிகளில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவு, நேற்று கோழிக்கோட்டில் நடந்த கோர விமான விபத்து என சோதனைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. ஆனால் கேரள இடதுசாரி அரசு இச்சவால்களை சமாளிக்கும் விதம் இந்திய மக்களின் கட்சி அரசியலுக்கு அப்பால் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது. 


மத்திய அரசு மாநில அரசுக்குத் தர வேண்டிய ஜிஎஸ்டி பங்கினை முழுமையாகத் தர மறுத்து ஏதோ கருணையால் கொடுப்பது போல அவ்வப்போது சிறிதளவு கொடுப்பதை இந்திய அனைத்து மாநில மக்களும் ஒருசேர கண்டிக்கின்றனர். கேரள அரசின் கடன்வாங்கும் அளவையும் மத்திய அரசு குறைத்து விட்டது. தமிழ்நாட்டைப் போல பெரும் வருமானம் வரக்கூடிய பெரிய மாநிலம் அல்ல கேரளா. இந்த நிதிப் பற்றாக்குறையிலும் பொது வினியோக நடைமுறையில் புதிய அணுகுமுறையை அறிமுகப் படுத்தியது கேரளா. வீட்டிற்கே இன்றியமையா உணவுப் பொருள்களைக் கொண்டு சென்று கொடுக்கும் முறையால் பட்டினிக் கொடுமையிலிருந்து ஏழைமக்கள் பாதுகாக்கப் பட்டனர். நோய்த் தொற்றுக்கு ஆளாகாமல் இருக்க வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கச் சொல்லி விட்டு அன்றாடங் காய்ச்சிகளின் யதார்த்த தேவைகளைப் பற்றி கவலைப்படாமல் பொய்களை ஆரவார அறிவிப்புகளாக வெளியிடும் அரசியல் வாதிகளைப் போலன்றி நேரடியாக அவர்களின் துயர் அறிந்து அதைப் போக்கும் நடவடிக்கையால் பட்டினிச்சாவு இல்லை என்று கேரள அரசால் சொல்ல முடிந்தது. கொரோனாவைக் கையாண்ட விதத்தை  'நியூயார்க் டைம்ஸ்' அமெரிக்க ஏடு பாராட்டி எழுதியிருந்தது. கேரள மாநில அரசின் சுகாதாரத் துறை பெண் அமைச்சர், அய்க்கிய நாடு சபையில் காணொளி மூலம் உரையாற்ற அழைக்கப் பட்டார். மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்வதற்கு முன்னரே மாநில முதலமைச்சர் அரசின் நிதி இருப்புக்கு 


இவை எல்லாம் இடதுசாரி அரசியலுக்கு எதிர் நிலை எடுக்கும் வலதுசாரி பிற்போக்கு பாரதிய ஜனதாவுக்குப் பிடிக்கும் என்றோ, மனம் திறந்து பாராட்டும் என்றோ நாம் எதிர்பார்க்கவில்லை. ஆனால் காங்கிரஸ் இயக்கமும் எதிர்க் கட்சி அரசியல் என சொல்லிக் கொண்டு நியாயமற்ற முறையில் பாஜக போலவே போராட்டம் நடத்துவது சரியா என்பதை பார்க்க வேண்டும். 


இதற்கு முன்பு, சபரிமலை விவகாரத்தில் முதலில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த பாஜகவினர், வழக்கில் சாதமான தீர்ப்பு வந்த பிறகு, கேரள அரசு தீர்ப்பை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கத் துவங்கிய போது, இந்து மதத்திற்கு எதிராக கேரள அரசு நடப்பதாகச் சொல்லி பெரும் கலவரத்தை பல்வேறு அமைப்புகள் மூலம் உருவாக்க முனைந்தது. மத நடைமுறைகளுக்கு எதிராகச் செயல்படும் அரசு கேரள அரசு என்ற தோற்றத்தையும், இந்துக்களுக்கு எதிரானவர்கள் கம்யூனிஸ்ட்கள் என்ற ஆதாரமற்ற நச்சுப் பரப்புரையை மேற்கொண்டு அரசுக்கு எதிரான போராட்டத்தை பாஜக அமைப்புகள் அறிவித்து நடத்தத் துவங்கின. 


இந்தியாவில், வெற்றிகரமான குஜராத் மாடல் எனப் பேசப்பட்டும், கார்ப்பரேட் கொள்ளையர்களால் பெரும் விளம்பரமும் செய்யப்பட்ட மோடி-அமித் ஷா கூட்டணி மாடல் உண்மையான முன்னேற்றத்தை அந்த மாநிலத்திற்குக் கொண்டு வரவில்லை என்பது வெட்ட வெளிச்சமானதும், நவீன தாராளமயத்திற்கெதிரான மாற்றுத் திட்டங்களோடு எல்லா முனைகளிலும் குறிப்பாக வேளாண் துறையில் கொண்டு வந்த சீர்திருத்தங்கள் நல்ல முன்னேற்றத்தை தரத்துவங்கின. மக்கள் நலத் திட்டங்கள் முழுமையாகப் பயனாளிகளுக்குச் சென்று சேரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இவை எல்லாம் சேர்ந்து கேரள மாடலாக அனைவரும் அங்கீகரிக்கும் மாற்று அரசியலாக வளர்ந்தது. நாடெங்கும் விவாதப் பொருளாக ஆவதைக் கண்டு சங் பரிவாரங்களுக்கும், அவர்களின் பிரதிநிதிகளாக இருக்கும் மத்தியில் ஆளும் கட்சிக்கும் அதிர்ச்சியையும் கலக்கத்தையும் கொடுத்ததில் வியப்பேதுமில்லை. எனவே பொய்ப் பிரச்சாரங்கள், அவதூறுச் செய்திகள் பரப்புவதற்கென்றே செயல்படும் தரகர்கள் தங்கள் வேலைகளை இடதுசாரி அரசுக்கு எதிராகச் செய்யத் துவங்கி இன்றளவும் செயல் படுகிறார்கள்.


சமீபத்தில் அவர்களுடைய உரத்த அவதூறுப் பிரச்சாரம், கேரள தங்கக் கடத்தல் விவகாரத்தில் தீவிரமாகி உள்ளது. இடதுசாரி அரசு இராஜினாமா செய்ய வேண்டும் என்றும், முதல்வர் பினாரயி விஜயன் ஊழலில் பங்கு பெற்றுள்ளார் என்றும் குற்றம் சுமத்தி உள்ளனர். பாஜக அரசு எதிர்ப்பு போராட்டங்களை நடத்துகிறது. கேரள முதல்வர், மத்திய புலனாய்வுத் துறை இது பற்றி விசாரிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்குக் கடிதம் எழுதிய பிறகும், தான் எவ்வித விசாரணைக்கும் தயார் என சொன்ன பிறகும் அரசியல் வன்மத்துடன் பாஜக, மக்கள் மத்தியில் இடதுசாரி அரசுக்கு இருக்கும் செல்வாக்கையும், மரியாதையையும் சீர்குலைக்கும் வண்ணம் அனைத்து வேலைகளையும் செய்து வருகிறது. மத்திய அரசாங்கம் 'தேசிய விசாரணை முகமை' (NIA)யே விசாரணைக்கு அனுப்பி உள்ளது. முடிவுகள் வரும்போது குற்றவாளிகள் யார் என்பதை இந்நாட்டு மக்கள் தெரிந்து கொள்வார்கள்.


சபரிமலை பிரச்சினை, மார்ச் மாத வட டெல்லிக் கலவரம், 53 அப்பாவி மக்கள் கொலை, அதில் பெரும்பான்மை இஸ்லாமிய மக்கள், தொழுகை நடந்து வரும் ஏராளமான பள்ளி வாசல்கள் எரிப்பு, ஜாமியா மிலியா பல்கலைக்கழக வளாகத் தாக்குதல், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் விடுதிக்குள் மாணவ, மாணவிகள் மேல் தொடுக்கப்பட்ட குண்டர்படைத் தாக்குதல்கள், மதவெறியைத் தூண்டி நடத்தப்படும் கொலைகள் (lynching), மனித உரிமைப் போராளிகள் மீதான வழக்கு என்ற பெயரில் தனிமைச் சிறைக்குள் அடைப்பு, ஜனநாயக நெறிமுறைகளை அப்பட்டமாக மீறுதல் என சங்கிலித் தொடரான தாக்குதல்கள், கொரோனா காலத்தில் அலங்கோல நடைமுறைகளால் மக்கள் படும் அவதி என்பது தனிக்கதை. கொரோனா கால ஊரடங்கைப் பயன்படுத்திக் கொண்டு மக்களுக்கு விரோதமான சட்டங்களை வேக வேகமாக அமுல் படுத்த ஒப்புதல் அளிப்பது, பொதுத்துறைகளை ஒழித்து கார்ப்பரேட் கைக் கூலியாகச் செயல்படுவது என அடாவடித்தனமான காரியங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கும் போது இப்போதைய ஆளுங் கட்சிக்கான மாற்றாக விளங்கும் ஒரு பொறுப்புள்ள மிகப் பெரிய இயக்கமான காங்கிரஸ் தன் மதச் சார்பற்ற கொள்கையிலிருந்து வழுவி, வாக்கரசியலை மனத்திற்கொண்டு நிலையை மாற்றிக் கொள்வது மதவாத அரசியலை வீழ்த்தும் மாற்றத்தைக் கொண்டு வராது. 


சபரிமலை பிரச்சினையில் பாஜகவின் நிலைபாடு சந்தர்ப்பவாதமானது என்பதை மக்கள் தெரிந்து கொண்டார்கள். பெண்ணுரிமை பற்றிய அதன் நிலை போலித்தனமானது. ஆனால் காங்கிரஸும் போராட்டத்தை அறிவித்தது எந்த வகையில் நியாயம்? தங்கக் கடத்தல் பிரச்சினையிலும் விசாரணை நடைபெற்று வரும் வேளையில் இடதுசாரி அரசுக்கு எதிரான போராட்டம் சரிதானா? இப்போது அயோத்தி கோயில் அடிக்கல் நாட்டும் நிகழ்வில் நடந்த அரசியல் அமைப்புச் சட்ட நெறி முறைகள் மீறப்பட்டது தெரிந்தும், ஜவஹர்லால் நேரு உயர்த்திப் பிடித்த மதச்சார்பற்ற கொள்கை நீர்த்துப்போகும்படி மதச்சார்பு நிலை எடுக்கும் வகையில் அறிக்கைகள் வருவது யாரைப் பாதிக்கும்? ஒட்டுமொத்த மதச்சார்பற்ற சக்திகளை ஒன்று படுத்தும் தலையாயக் கடமையிலிருந்து தவறுவது இயக்கத்தைப் பலப்படுத்துமா? 


மாநில அளவில் எடுக்கும் அரசியல் நிலைபாடுகள் பிரச்சினையின் தன்மையைப் பொறுத்து தேசிய அளவிலான அரசியலில் எதிர்மறைத் தாக்கத்தை உருவாக்கும் என்பதை நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இதையும் மீறி இராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்கச் செய்வதற்கு நடைபெறும் தரகுமாறி அரசியல் அயோக்கியத்தனத்தை முறியடிக்கும் வகையில் இடதுசாரிகள் காங்கிரஸுக்கு நிபந்தனையற்ற ஆதரவை அறிவிக்கிறார்கள். எதிர்வரும் நாட்களில் ஏனைய மதச்சார்பற்ற சக்திகளை ஒன்றிணைத்த இடது சாரிகளுடனான தேசிய அளவிலான கூட்டணிதான் மதவெறி பாசிச அரசியலுக்கான மாற்றாக அமைய முடியும் என்பதை உணர்ந்து அந்தக் கூட்டணிக்கான தளம் கட்டியமைக்கப் படுவதற்கான ஆக்கப்பூர்வ செயல்களில் ஈடுபடுவதையே காங்கிரஸிடம் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். 


அதை நோக்கிய பயணத்தைத் தாமதமின்றி தொடங்குவதுதான் இன்றைய அவசரத் தேவை. 


காங்கிரஸ் பேரியக்கம் கவனத்தில் கொள்ளுமா?



 






 

இனியொரு விதி செய்வோம்!

அரசுத்துறை பொதுத்துறையாக மாற்றப்பட்டால் தனியார் துறைக்குப் போய்விடும். ஆகவே எதிர்த்தோம் என்ற வாதம் அடிபட்டுப் போய்விட்டது. இரயில்வே அரசுத்துறைதான். பொதுத்துறை ஆகாமலே தனியாருக்குப் போவதற்கான ஏற்பாடு அரசின் திட்டத்தில். வங்கிகள், இன்ஸ்யூரன்ஸ், இலாபம் ஈட்டும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் எல்லாவற்றிலும் தனியார் நுழைய அனுமதி! இவை எல்லாம் எப்படி வருகிறது? அரசின் கொள்கை இது என சொல்லித்தான் இந்த மாற்றங்கள் நடைபெறுகின்றன. ஆதரிப்பது, எதிர்ப்பது என்பது தொழிற்சங்கத்தில் அரசியல் செய்ய மட்டுமே உதவும். பொதுத்துறையைப் பற்றிய கம்யூனிஸ்ட்களின் நிலைபாடு என்ன? பொதுத்துறையை பலப்படுத்த போராடுவதும், தனியார் நுழைவைத் தடுப்பதும்தானே. அரசுத்துறையாக இருந்து பொதுத்துறையாக தொலைத்தொடர்பு மட்டும் தான் மாற்றப்பட்டதா? வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டதே. தனியார் வங்கிகள் போட்டி போட முடியாமல் ஓடி ஒளிந்து மறைந்து போனதை எப்படி மறைக்க முடியும்? பிஎஸ்என்எல் பொதுத்துறையாக மாற்றப்பட்ட போது ஆட்சியாளர்களின் நோக்கம் வேறாக இருந்திருக்கலாம். ஆனால் தொழிலாளி வர்க்கம் பொதுத்துறையை வேண்டாம் என சொல்ல முடியுமா? அக்டோபர் 2000 முதல் பொதுத்துறையாக மாறிய பிஎஸ்என்எல் பிழைக்காது என வெறும் ஆருடம் மட்டுமே சொல்லி எதிர்க்கிறோம் என்பதோடு வேலை முடிந்து விட்டது என வாளாயிருக்காமல் இது தவிர்க்க முடியாது எனத் தெரிந்து கொண்டு தொழிலாளியின் வேலைப் பாதுகாப்பை உத்தரவாதம் செய்ய வேலைப் பாதுகாப்பு, நிதி தற்சார்பு, ஓய்வூதிய பாதுகாப்பு என்ற கோரிக்கைகளுக்காகப் போராடி உடன்பாடு கண்டதால்தான் இன்று விருப்ப ஓய்வு என்ற மறைமுகமான கட்டாய ஓய்வு வந்து வெளியேற வேண்டிய சூழ்நிலையில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள், அதிகாரிகள் ஓய்வூதியப் பாதுகாப்போடு வந்துள்ளனர். அன்று போராடாதது மட்டுமல்ல; போராட்டத்தை உடைக்கும் வகையில் பணிக்குச் செல்வோம் என மறைமுகமான எதிர்ப் போராட்டம் நடந்ததை யாரும் மறக்க முடியுமா? நிதானமாக யோசிப்போம். அரசியல் மாற்றம், ஆளும் கட்சி மாற்றம் எல்லாம் நடந்தும் தனியாருக்கு ஆதரவான நிலையை அரசு தொடர்ந்து எடுத்தும், இருபது ஆண்டுகள் நம் தொழிலாளர்களும், அதிகாரிகளும் போராடிக் காத்தனர் என்ற உண்மையை மறுக்க முடியுமா? நம் துறை நட்டத்தில் போக நாம் காரணமல்ல. சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் கார்ப்பரேட் கொள்ளையர்களின் சட்டைப் பைகளுக்குள்ளே ஆளும் கட்சிகள் அடைக்கலம் ஆனதுதானே காரணம். காண்ட்ராக்ட் ஊழியர்களுக்கான ஊதியம் வழங்கப்படவில்லை என்பதை எதிர்த்து குரல் கொடுத்த வேளையில் நிரந்தர ஊழியர்களுக்கான ஊதியம் நிறுத்தப் பட்டதே. அதை எதிர்த்து கடும் போராட்டத்தை நம்மால் ஏன் நடத்த முடியவில்லை? போராடக் கூடாது என தலைமைகளை உறுப்பினர்கள் தடுத்தார்களா? வேலை செய்ததற்கான ஊதியத்தை மறுக்க எவனுக்கும் உரிமை இல்லை. ஊதியம் அடிப்படை உரிமை அல்லவா? நூறு ரூபாய் நமக்கில்லை, எம்டிஎன்எல் லுக்கு மட்டும் என்ற போது இருபது நாட்கள் நம்மால் போராட முடிந்ததே. கிடைக்கவில்லை என்றாலும் நம் போராட்டம் ஏற்படுத்திய வீச்சை யாரும் மறுக்க முடியுமா? ஆனால் ஊதியம் தர பணம் இல்லை என்ற போது அதை சகித்துக் கொள்ளும் மனநிலை நமக்கு வந்தது. தொழிற்சங்கத் தலைமை மீது அதிகரித்த கோபத்தை நம் தலைவர்கள் அறியாதவர்கள் அல்ல. ஆனால் ஒருங்கிணைந்த போராட்டம் வரவில்லையே. 

போராட முடியவில்லை என்றாலும் வழக்கு மன்றத்தை நாடினோமா? அதுவும் இல்லை. விருப்ப ஓய்வு அறிவிப்பு வந்தவுடன் தலைமையின் கட்டளைகளை உடைத்தெறிந்து விட்டு வரிசையில் நின்ற தொழிலாளி விருப்பத்தை தெரிவித்த போது தலைமையின் மீது இருந்த கோபத்தையும், அவநம்பிக்கையையும் சேர்த்தே தெரிவித்தான். பாதிக்குப் பாதி ஊழியர்கள் வெளியே சென்று விட்ட பின்னும் ஊதியம் வழங்குவதில் தாமதம். கடிதங்கள் பறக்கின்றன. ஏனோதானோ பதில் நிர்வாகத்தால் தரப்படுகிறது. வந்து விடுகிறோம். வாழ்வா சாவா என்பதை பார்த்து விடுவதில் என்ன தயக்கம்? தோழர்களே! ஒருவரை ஒருவர் குறை கூறுவதை விட்டு எஞ்சிய தொழிலாளர்களை ஒன்று சேர்க்கும் வழிகளை யோசியுங்கள்.


 பிரிவதற்கான நியாயங்கள் நம்மைப் பிரித்தன என்பது சரியானால், சேர்வதற்கான கட்டாயம் உருவாகும் போது இணைவதில் என்ன தயக்கம்? வேறொன்றும் ஆழமான தத்துவார்த்த வேறுபாடு இருப்பதற்கான வாய்ப்பில்லை. எனவே காலம் தாழ்த்தாது, செல்லரித்துப் போன பழஞ்சுவடிகளை எடுத்து வைத்துக்கொண்டு பாடம் சொல்வதை விடுத்து எஞ்சிய காலத்தில் உருப்படியான காரியங்களைச் செய்து நம்பியிருக்கும் சொற்ப தொழிலாளர்களைக் காப்பாற்ற வழி தேடுங்கள். ஒற்றுமையின்மையால் இழந்தது போதும். ஒன்று பட்டு அரசின் சதிகளை வெல்ல ஆவன செய்யுங்கள். யாரையும் குறைசொல்ல வேண்டும் என்பது அறவே நோக்கமல்ல. கடந்த கால நிகழ்வுகளைப் பதிவு செய்வது, பழைய கணக்கை தீர்ப்பதற்கல்ல; புதிய கணக்கைத் தொடங்குவதற்கே! தோழமையோடு மன்றாடுகிறேன். ஏதேனும் செய்யுங்கள் தலைவர்களே! தோழர்களே!

Thursday, August 6, 2020

இங்கே தரப்பட்டிருக்கும்  இலக்கியங்களில் எங்காவது ஓரிடத்தில் இந்து மதம் என்னும் சொல்லாடல் இருக்கிறதா என யாரேனும் சொல்லுங்கள். நமது முன்னோர்கள் சிவ மதம், வைணவ மதம், பவுத்த மதம், சமண மதத்தில் ஏதாவதொன்றைச்  சார்ந்தவர்களாகவே இருந்தனர். கிறித்துவமும், இஸ்லாமும்  பிற்காலத்தில் வந்தவை. அவைகளையும் அவர்கள் ஏற்றுக் கொண்டனர். மத மோதல்கள் எல்லாக் காலங்களிலும் உலகம் முழுவதும் நடந்துள்ளன.  நவீன உலகத்தில் இன்னும் நடைபெற்றுக் கொண்டுதான் உள்ளது. இது ஏன் நடைபெறுகிறது என்பதை சிந்தியுங்கள்.

மதத்திற்கு அப்பால், தமிழர்கள் நல்லறம் எதுவெனினும் அதை ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம் பெற்றிருந்தனர். எனவேதான்  ஐம்பெரும் காப்பியங்களுள் சிலப்பதிகாரமும், மணிமேகலையும், திருக்குறளும் ஏனைய சில நூல்கள் சமண அற நூல்கள் என பார்க்கவில்லை. பக்தி இலக்கியங்கள், புராண இதிகாசங்களைப் போல  ஆபாசக் குப்பைகளைக் கொண்டதாகத்  திகழவில்லை. தமிழுக்கும், தேவ பாஷைக்கும் உள்ள வேறுபாடு. 

இது தான் #தமிழ் ! இவை அனைத்தையும் படிக்க ஒரு பிறவி போதாது..

பெயர்களையாவது படித்து அறிவோம்..
1. தேவாரம் 
2. திருவாசகம்
3. திருமந்திரம்
4. திருவருட்பா 
5. திருப்பாவை 
6. திருவெம்பாவை 
7. திருவிசைப்பா
8. திருப்பல்லாண்டு
9. கந்தர் அனுபூதி
10. இந்த புராணம்
11. பெரிய புராணம்
12. நாச்சியார் திருமொழி 
13. ஆழ்வார் பாசுரங்கள் போன்ற மிகச் சிறந்த பக்தி இலக்கியங்கள்..!

1.நற்றிணை 
2.குறுந்தொகை 
3.ஐங்குறுநூறு 
4.அகநானூறு 
5.புறநானூறு 
6.பதிற்றுப்பத்து 
7.பரிபாடல் 
8.கலித்தொகை என்னும் "எட்டுத்தொகை" சங்க நூல்கள்.. !

1.திருமுருகாற்றுப்படை 2.சிறுபாணாற்றுப்படை 3.பெரும்பாணாற்றுப்படை 4.பொருநராற்றுப்படை 
5.முல்லைப்பாட்டு 
6.மதுரைக்காஞ்சி 
7.நெடுநல்வாடை 
8.குறிஞ்சிப் பாட்டு 
9.பட்டினப்பாலை 
10.மலைபடுகடாம் என்னும் "பத்துப்பாட்டு" சங்க நூல்கள்....!

1.திருக்குறள் 
2.நாலடியார் 
3.நான்மணிக்கடிகை 
4.இன்னாநாற்பது 
5.இனியவை நாற்பது 
6.கார் நாற்பது 
7.களவழி நாற்பது 
8.ஐந்திணை ஐம்பது 
9.திணைமொழி ஐம்பது 
10.ஐந்திணை எழுபது 
11.திணைமாலை       நூற்றைம்பது 
12.திரிகடுகம் 
13.ஆசாரக்கோவை 
14.பழமொழி 
15.சிறுபஞ்சமூலம் 
16.முதுமொழிக் காஞ்சி 
17.ஏலாதி 
18.இன்னிலை என்னும் பதினெண்கீழ்க்கணக்கு நீதி நூல்கள்...!

1.சிலப்பதிகாரம் 
2.மணிமேகலை 
3.சீவக சிந்தாமணி 
4. வளையாபதி 
5. குண்டலகேசி 
போன்ற ஐம்பெருங்காப்பியங்கள்... !

1.அகத்தியம்  
2.தொல்காப்பியம்
3.புறப்பொருள்
வெண்பாமாலை 
4.நன்னூல் 
5.பன்னிரு பாட்டியல் போன்ற இலக்கண நூல்கள் மற்றும்
6.இறையனார் களவியல் உரை எனும் உரைநூல்..!

1.கம்பராமாயணம்-வழிநூல்.

1.முத்தொள்ளாயிரம் 
2.முக்கூடற்பள்ளு 
3.நந்திக்கலம்பகம் 
4.கலிங்கத்துப்பரணி 
5.மூவருலா போன்ற எண்ணற்ற சிற்றிலக்கிய வகைகள்...!

ஒரு மொழியின் மிகச்சிறந்த பண்பே செம்மொழிக்கான கீழ்க்கண்ட பதினோரு தகுதிகளைக் கொண்டிருப்பதுதான்..

1.தொன்மை 
2.தனித்தன்மை (தூய்மைத் தன்மை) 
3.பொதுமைப் பண்புகள் 
4.நடுவுநிலைமை 
5.தாய்மைத் தன்மை 
6.கலை பண்பாட்டுத் தன்மை 
7.தனித்து இயங்கும் தன்மை 
8.இலக்கிய இலக்கண வளம் 
9.கலை இலக்கியத் தன்மை 
10.உயர் சிந்தனை 
11.மொழிக் கோட்பாடு
இந்தப் பதினோரு பண்புகளையும் கொண்ட உலகின் மிக மூத்த மொழி என் தாய்மொழி தமிழ்..!

சமய குரவர்கள்
----------------------------

1. திருஞானசம்பந்தர்
2. திருநாவுக்கரசர்
3. சுந்தரமூர்த்தி சுவாமிகள்
4. மாணிக்கவாசகர்

சைவம் வளர்த்தோர்
-----------------------------------
1. சேக்கிழார்
2. திருமூலர்
3. அருணகிரிநாதர்
4. குமரகுருபரர்

12 ஆழ்வார்கள்
---------------------------
1. பொய்கையாழ்வார்
2. பூதத்தாழ்வார்
3. பேயாழ்வார்
4. திருமழிசை ஆழ்வார்
5. நம்மாழ்வார்
6. மதுரகவி ஆழ்வார்
7. குழசேகராழ்வார்
8. பெரியாழ்வார்
9. ஆண்டாள் நாச்சியார்
10. தொண்டரடிப் பொடியாழ்வார்
11. திருப்பாணாழ்வார்
12. திருமங்கையாழ்வார்
-----------------------

தமிழ் பெரும் புலவர்கள் பட்டியல்..!
------------------------------------------------------------
அகம்பன் மாலாதனார்
அஞ்சியத்தை மகள் நாகையார்
அஞ்சில் அஞ்சியார்
அஞ்சில் ஆந்தையார்
அடைநெடுங்கல்வியார்
அணிலாடு முன்றிலார்
அண்டர் மகன் குறுவழுதியார்
அதியன் விண்ணத்தனார்
அதி இளங்கீரனார்
அம்மூவனார்
அம்மெய்நாகனார்
அரிசில் கிழார்
அல்லங்கீரனார்
அழிசி நச்சாத்தனார்
அள்ளூர் நன்முல்லையார்
அறிவுடைநம்பி
ஆரியன் பெருங்கண்ணன்
ஆடுதுறை மாசாத்தனார்
ஆதிமந்தி
ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக்கண்ணத்தனார்
ஆலங்குடி வங்கனார்
ஆலத்தூர் கிழார்
ஆலம்பேரி சாத்தனார்
ஆவூர்கிழார் மகனார் கண்ணனார்
ஆவூர் காவிதிகள் சகாதேவனார்
ஆவூர்கிழார்
ஆலியார்
ஆவூர் மூலங்கீரனார்
இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார்
இடைக்காடனார்
இடைக்குன்றூர்கிழார்
இடையன் சேந்தன் கொற்றனார்
இடையன் நெடுங்கீரனார்
இம்மென்கீரனார்
இரணியமுட்டத்து பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்
இருங்கோன் ஒல்லையன் செங்கண்ணனார்
இருந்தையூர்க் கொற்றன் புலவன்
இரும்பிடர்தலையார்
இளங்கீரந்தையார்
இளங்கீரனார்
இளநாகனார்
இளந்திரையன்
இளந்தேவனார்
இளம்புல்லூர்க் காவிதி
இளம்பூதனார்
இளம்பெருவழுதி
இளம்போதியார்
இளவெயினனார்
இறங்குடிக் குன்றநாடன்
இறையனார்
இனிசந்த நாகனார்
ஈழத்துப் பூதந்தேவனார்
உகாய்க் குடிகிழார்
உக்கிரப் பெருவழுதி
உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார்
உம்பற்காட்டு இளங்கண்ணனார்
உருத்திரனார்
உலோச்சனார்
உவர்கண்ணூர் புல்லங்கீரனார்
உழுந்தினைம் புலவர்
உறையனார்
உறையூர் இளம்பொன் வாணிகனார்
உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார்
உறையூர்ச் சல்லியங் குமரனார்
உறையூர்ச் சிறுகந்தனார்
உறையூர்ப் பல்காயனார்
உறையூர் மருத்துவன் தாமோதரனார்
உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
ஊட்டியார்
ஊண்பித்தை
ஊண்பொதி பசுங்குடையார்
எயிற்றியனார்
எயினந்தையார்
எருமை வெளியனார்
எருமை வெளியனார் மகனார் கடலனார்
எழூப்பன்றி நாகன் குமரனார்
ஐயாதி சிறு வெண்ரையார்
ஐயூர் முடவனார்
ஐயூர் மூலங்கீரனார்
ஒக்கூர் மாசாத்தனார்
ஒக்கூர் மாசாத்தியார்
ஒருசிறைப் பெரியனார்
ஒரூத்தனார்
ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்
ஓதஞானி
ஓதலாந்தையார்
ஓரம்போகியார்
ஓரிற்பிச்சையார்
ஓரேர் உழவர்
ஔவையார்
கங்குல் வெள்ளத்தார்
கச்சிப்பேடு இளந்தச்சன்
கச்சிப்பேடு காஞ்சிக்கொற்றனார்
கச்சிப்பேடு பெருந்தச்சனார்
கடம்பனூர்ச் சாண்டில்யன்
கடலூர்ப் பல்கண்ணனார்
கடியலூர் உருத்திரங்கண்ணனார்
கடுந்தொடைக் காவினார்
கோவர்த்தனர்
கோவூர்க் கிழார்
கோவேங்கைப் பெருங்கதவனார்
கோழிக் கொற்றனார்
கோளியூர்க் கிழார் மகனார் செழியனார்
கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக்குமரன்
சங்கவருணர் என்னும் நாகரியர்
சத்திநாதனார்
சல்லியங்குமரனார்
சாகலாசனார்
சாத்தந்தந்தையார்
சாத்தனார்
சிறுமோலிகனார்
சிறுவெண்டேரையார்
சிறைக்குடி ஆந்தையார்
சீத்தலைச் சாத்தனார்
செங்கண்ணனார்
செம்பியனார்
செம்புலப்பெயல்நீரார்
செயலூர் இளம்பொன்சாத்தன் கொற்றனார்
செய்திவள்ளுவன் பெருஞ்சாத்தன்
செல்லூர்கிழார் மகனார் பெரும்பூதன் கொற்றனார்
செல்லூர்க்கோசிகன் கண்ணனார்
சேந்தங்கண்ணனார்
சேந்தம்பூதனார்
சேந்தங்கீரனார்
சேரமானெந்தை
சேரமான் இளங்குட்டுவன்
சேரமான் கணைக்கால் இரும்பொறை
சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை
சோனாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
சோழன் நலங்கிள்ளி
சோழன் நல்லுருத்திரன்
தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார்
தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்
தனிமகனார்
தாமாப்பல் கண்ணனார்
தாமோதரனார்
தாயங்கண்ணனார்
தாயங்கண்ணியார்
தாயுமானவர்
திப்புத்தோளார்
திருத்தாமனார்
தீன்மதிநாகனார்
தும்பிசேர்கீரனார்
துறைக்குறுமாவிற் பாலங்கொற்றனார்
துறையூர்ஓடைக்கிழார்
தூங்கலோரியார்
தேய்புரி பழங்கயிற்றினார்
தேரதரன்
தேவகுலத்தார்
தேவனார்
தொடித்தலை விழுத்தண்டினர்
தொண்டி ஆமூர்ச்சாத்தனார்
தொல்கபிலர்
நக்கண்ணையார்
நக்கீரர்
நப்பசலையார்
நப்பண்ணனார்
நப்பாலத்தனார்
நம்பிகுட்டுவன்
நரிவெரூத்தலையார்
நரைமுடி நெட்டையார்
நல்லச்சுதனார்
நல்லந்துவனார்
நல்லழிசியார்
நல்லாவூர்க் கிழார்
நல்லிறையனார்
நல்லுருத்திரனார்
நல்லூர்ச் சிறுமேதாவியார்
நல்லெழுநியார்
நல்வழுதியார்
நல்விளக்கனார்
நல்வெள்ளியார்
நல்வேட்டனார்
நற்சேந்தனார்
நற்றங்கொற்றனார்
நற்றமனார்
நன்பலூர்ச் சிறுமேதாவியார்
நன்னாகனார்
நன்னாகையார்
நாகம்போத்தன்
நாமலார் மகன் இளங்கண்ணன்
நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனார்
நெடுங்கழுத்துப் பரணர்
நெடும்பல்லியத்தனார்
நெடும்பல்லியத்தை
நெடுவெண்ணிலவினார்
நெட்டிமையார்
நெய்தற் கார்க்கியார்
நெய்தற் சாய்த்துய்த்த ஆவூர்க்கிழார்
நெய்தற்றத்தனார்
நொச்சி நியமங்கிழார்
நோய்பாடியார்
பக்குடுக்கை நன்கணியார்
படுமரத்து மோசிகீரனார்
படுமரத்து மோசிக்கொற்றனார்
பதடிவைகலார்
பதுமனார்
பரணர்
கடுந்தொடைக் கரவீரன்
கடுவன் இளமள்ளனார்
கடுவன் இளவெயினனார்
கடுவன் மள்ளனார்
கணக்காயன் தத்தனார்
கணியன் பூங்குன்றனார்
கண்ணகனார்
கண்ணகாரன் கொற்றனார்
கண்ணங்கொற்றனார்
கண்ணம் புல்லனார்
கண்ணனார்
கதக்கண்ணனார்
கதப்பிள்ளையார்
கந்தரத்தனார்
கபிலர்
கம்பர்
கயத்தூர்கிழார்
கயமனார்
கருங்குழலாதனார்
கரும்பிள்ளைப் பூதனார்
கருவூர்க்கிழார்
கருவூர் கண்ணம்பாளனார்
கருவூர் கதப்பிள்ளைச் சாத்தனார்
கருவூர் கலிங்கத்தார்
கருவூர் கோசனார்
கருவூர் சேரமான் சாத்தன்
கருவூர் நன்மார்பனார்
கருவூர் பவுத்திரனார்
கருவூர் பூதஞ்சாத்தனார்
கருவூர் பெருஞ்சதுக்கத்துப் பூதனார்
கல்பொருசிறுநுரையார்
கல்லாடனார்
கவைமகன்
கழாத்தலையார்
கழார்க் கீரனெயிற்றியனார்
கழார்க் கீரனெயிற்றியார்
கழைதின் யானையார்
கள்ளிக்குடிப்பூதம்புல்லனார்
கள்ளில் ஆத்திரையனார்
காக்கைப்பாடினடியார் நச்செள்ளையார்
காசிபன் கீரன்
காட்டூர்கிழார் மகனார் கண்ணனார்
காப்பியஞ்சேந்தனார்
காப்பியாற்றுக் காப்பியனார்
காமஞ்சேர் குளத்தார்
காரிக்கிழார்
காலெறி கடிகையார்
காவட்டனார்
காவற்பெண்டு
காவன்முல்லையார்
காவிரிப் பூம்பட்டினத்துக் கந்தரத்தனார்
காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்
காவிரிப் பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்
காவிரிப் பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணனார்
காவிரிப் பூம்பட்டினத்துப் பொன்வாணிகனார் மகனார் நப்பூதனார்
கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்
கிடங்கி்ல் காவிதிப் பெருங்கொற்றனார்
கிடங்கில் குலபதி நக்கண்ணனார்
கிள்ளிமங்கலங்கிழார்
கிள்ளிமங்கலங்கிழார் மகனார் சேரக்கோவனார்
கீரங்கீரனார்
கீரந்தையார்
குடபுலவியனார்
குடவாயிற் கீரத்தனார்
குட்டுவன் கண்ணனார்
குட்டுவன் கீரனார்
குண்டுகட் பாலியாதனார்
குதிரைத் தறியனார்
குப்பைக் கோழியார்
குமட்டூர் கண்ணனார்
குமுழிஞாழலார் நப்பசலையார்
குழற்றத்தனார்
குளம்பனார்
குளம்பாதாயனார்
குறமகள் இளவெயினி
குறமகள் குறியெயினி
குறியிறையார்
குறுங்கீரனார்
குறுங்குடி மருதனார்
குறுங்கோழியூர் கிழார்
குன்றம் பூதனார்
குன்றியனார்
குன்றூர்க் கிழார் மகனார்
கூகைக் கோழியார்
கூடலூர்க் கிழார்
கூடலூர்ப பல்கண்ணனார்
கூவன்மைந்தன்
கூற்றங்குமரனார்
கேசவனார்
கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார்
கொட்டம்பலவனார்
கொல்லன் அழிசி
கொல்லிக் கண்ணன்
கொள்ளம்பக்கனார்
கொற்றங்கொற்றனார்
கோக்குளமுற்றனார்
கோடைபாடிய பெரும்பூதன்
கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்
கோட்டியூர் நல்லந்தையார்
கோண்மா நெடுங்கோட்டனார்
கோப்பெருஞ்சோழன்
பராயனார்
பரூஉமோவாய்ப் பதுமனார்
பறநாட்டுப் பெருங்கொற்றனார்
பனம்பாரனார்
பாண்டரங்கண்ணனார்
பாண்டியன் ஆரியப்படைகடந்த நெடுஞ்செழியன்
பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார்
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
பாண்டியன் பன்னாடு தந்தான்
பாண்டியன் மாறன் வழுதி
பாரதம் பாடிய பெருந்தேவனார்
பாரிமகளிர்
பார்காப்பான்
பாலைக் கௌதமனார்
பாலை பாடிய பெருங்கடுங்கோ
பாவைக் கொட்டிலார்
பிசிராந்தையார்
பிரமசாரி
பிரமனார்
பிரான் சாத்தனார்
புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர்கிழார்
புல்லாற்றூர் எயிற்றியனார்
பூங்கணுத் திரையார்
பூங்கண்ணன்
பூதங்கண்ணனார்
பூதபாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு
பூதம்புல்லனார்
பூதனார்
பூதந்தேவனார்
பெருங்கண்ணனார்
பெருங்குன்றூர்க் கிழார்
பெருங்கௌசிகனார்
பெருஞ்சாத்தனார்
பெருஞ்சித்திரனார்
பெருந்தலைச்சாத்தனார்
பெருந்தேவனார்
பெருந்தோட் குறுஞ்சாத்தன்
பெரும் பதுமனார்
பெரும்பாக்கன்
பெருவழுதி
பேயனார்
பேய்மகள் இளவெயினி
பேராலவாயர்
பேரிசாத்தனார்
பேரெயின்முறுவலார்
பொதுக்கயத்துக் கீரந்தை
பொதும்பில் கிழார்
பொதும்பில் கிழார் மகனார் வெண்கண்ணி
பொதும்பிற் புல்லாளல் கண்ணியார்
பொத்தியார்
பொய்கையார்
பொருந்தில் இளங்கீரனார்
பொன்மணியார்
பொன்முடியார்
பொன்னாகன்
போதனார்
போந்தைப் பசலையார்
மடல் பாடிய மாதங்கீரனார்
மதுரை அளக்கர் ஞாழற் கவிஞர் மகனார் மள்ளனார்
மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
மதுரை ஆசிரியர் கோடங்கொற்றனார்
மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார்
மதுரை இனங்கௌசிகனார்
மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார்
மதுரை ஓலைக்கடைக் கண்ணம் புகுந்தாராயத்தனார்
மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார்
மதுரைக் கடையத்தார் மகன் வெண்ணாகனார்
மதுரைக் கணக்காயனார்
மதுரைக் கண்டராதித்தனார்
மதுரைக் கண்ணத்தனார்
மதுரைக் கவுணியன் பூதத்தனார்
மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார்
மதுரைக் காமக்கணி நப்பாலத்தனார்
மதுரைக் காருலவியங் கூத்தனார்
மதுரைக் கூத்தனார்
மதுரைக் கொல்லன் புல்லன்
மதுரைக் கொல்லன் வெண்ணாகனார்
மதுரைச் சுள்ளம் போதனார்
மதுரைத் தத்தங்கண்ணனார்
மதுரைத் தமிழக்கூத்தனார் நாகன் தேவனார்
மதுரைத் தமிழக் கூத்தனார்
மதுரைப் படைமங்க மன்னியார்
மதுரைப் பாலாசிரியர் சேந்தங்கொற்றனார்
மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார்
மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார்
மதுரைப் புல்லங்கண்ணனார்
மதுரைப் பூதனிள நாகனார்
மதுரைப் பூவண்ட நாகன் வேட்டனார்
மதுரைப் பெருங்கொல்லன்
மதுரைப் பெருமருதனார்
மதுரைப் பெருமருதிளநாகனார்
மதுரைப் போத்தனார்
மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார்
மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார்
மதுரை மருதங்கிழார் மகன் இளம்போத்தன்
மதுரை வேளாசன்
மருங்கூர்கிழார் பெருங்கண்ணனார்
மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார்
மருங்கூர்ப் பாகை சாத்தன் பிரியனார்
பூதனார்
மருதம் பாடிய இளங்கடுங்கோ
மருதனிளநாகனார்
மலையனார்
மள்ளனார்
மாங்குடிமருதனார்
மாடலூர் கிழார்
மாதீர்த்தன்
மாமிலாடன்
மாமூலனார்
மாயேண்டன்
மார்க்கண்டேயனார்
மாலைமாறன்
மாவளத்தன்
மாறோக்கத்துக் காமக்கண்ணியார்
மாறோக்கத்து நப்பசலையார்
மாற்பித்தியார்
மிளைக் கந்தன்
மிளைப் பெருங்கந்தன்
மிளைவேள் பித்தன்
மீனெறி தூண்டிலார்
முக்கல் ஆசான் நல்வெள்ளையார்
முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன்
முடத்தாமக்கண்ணியார்
முடத்திருமாறன்
முதுகூத்தனார்
முதுவெங்கண்ணனார்
முப்பேர் நாகனார்
முரஞ்சியயூர் முடிநாகராயர்
முள்ளியூர்ப் பூதியார்
முலங்கீரனார்
மையோடக் கோவனார்
மோசிக்கண்ணத்தனார்
மோசிக்கீரனார்
மோசிக்கொற்றன்
மோசிக்கரையனார்
மோசிசாத்தனார்
மோசிதாசனார்
வடநெடுந்தத்தனார்
வடவண்ணக்கன் தாமோதரன்
வடமோதங்கிழார்
வருமுலையாரித்தி
வன்பரணர்
வண்ணக்கன் சோருமருங்குமரனார்
வண்ணப்புறக் கந்தரத்தனார்
வாடாப்பிராந்தன்
வாயிலான் தேவன்
வாயிலிலங்கண்ணன்
வான்மீகியார்
விட்டகுதிரையார்
விரிச்சியூர் நன்னாகனார்
விரியூர் நன்னாகனார்
வில்லக விரலினார்
விழிகட்பேதை பெருங்கண்ணனார்
விற்றூற்று மூதெயினனார்
விற்றூற்று வண்ணக்கன் தத்தனார்
வினைத் தொழில் சோகீரனார்
வீரை வெளியனார்
வீரை வெளியன் தித்தனார்
வெண்கண்ணனார்
வெண்கொற்றன்
வெண்ணிக் குயத்தியார்
வெண்பூதன்
வெண்பூதியார்
வெண்மணிப்பூதி
வெள்ளாடியனார்
வெள்ளியந்தின்னனார்
வெள்ளிவீதியார்
வெள்வெருக்கிலையார்
வெள்ளைக்குடி நாகனார்
வெள்ளைமாளர்
வெறிபாடிய காமக்கண்ணியார்
வேட்டகண்ணன்
வேம்பற்றூர்க்கண்ணன் கூத்தன்
வேம்பற்றுக் குமரன்
ஒட்டக்கூத்தர்

மற்றும் பெண்பாற்புலவர்கள்:
---------------------------------------------------

அச்சியத்தை மகள் நாகையார்
அள்ளுரர் நன்முல்லை
ஆதிமந்தி - குறுந் 3
இளவெயினி - புறம் 157
உப்பை ஃ உறுவை
ஒக்கூர் மாசாத்தியார்
கரீனா கண்கணையார்
கவியரசி
கழார் கீரன் எயிற்றியார்
கள்ளில் ஆத்திரையனார்
காக்கை பாடினியார் நச்செள்ளையார்
காமக்கணிப் பசலையார்
காரைக்காலம்மையார்
காவற்பெண்டு
காவற்பெண்டு
கிழார் கீரனெயிற்றியார்
குட புலவியனார்
குமிழிநாழல் நாப்பசலையார்
குமுழி ஞாழல் நப்பசையார்
குறமகள் ஃ இளவெயினி
குறமகள் ஃ குறிஎயினி
குற மகள் இளவெயினியார்
கூகைக்கோழியார்
தமிழறியும் பெருமாள்
தாயங்கண்ணி - புறம் 250
நக்கண்ணையார்
நல்லிசைப் புலமை மெல்லியார்
நல்வெள்ளியார்
நெட்டிமையார்
நெடும்பல்லியத்தை
பசலையார்
பாரிமகளிர்
பூங்கண்ணுத்திரையார்
பூங்கண் உத்திரையார்
பூதபாண்டியன் தேவியார்
பெண்மணிப் பூதியார்
பெருங்கோப்பெண்டு
பேய்மகள் இளவெயினி
பேயனார்
பேரெயென் முறுவலார்
பொத்தியார்
பொன்மணியார்
பொன்முடியார்
போந்தலைப் பசலையார்
மதுவோலைக் கடையத்தார்
மாற்பித்தியார்
மாற்பித்தியார், இயற்பெயர் பித்தி
மாறோக்கத்து நாப்பசலையார்
முள்ளியூர் பூதியார்
முன்னியூப் பூதியார்
வரதுங்க ராமன் தேவியார்
வருமுலையாருத்தி
வில்லிபுத்தூர்க் கோதையார்
வெண்ணிக் குயத்தியார்
வெள்ளி வீதியார்
வெறிபாடிய காமக்கண்ணியர்.

சித்தர்கள்: பதினெண் சித்தர்:

1. திருமூலர்   
2. இராமதேவர் 
3. கும்பமுனி 
4. இடைக்காடர்
5. தன்வந்திரி  
6. வான்மீகி
7. கமலமுனி 
8. போகநாதர் 
9. குதம்பைச் சித்தர்
10. மச்சமுனி
11. கொங்கணர்
12, பதஞ்சலி
13. நந்திதேவர்
14. போதகுரு
15. பாம்பாட்டிச் சித்தர்
16. சட்டைமுனி
17. சுந்தரானந்த தேவர்
18. கோரக்கர்

இது ஒரு பட்டியல்.

1. அகப்பேய் சித்தர்
2. அழுகணிச் சித்தர்
3. ஆதிநாதர் வேதாந்தச் சித்தர்
4. சதோகநாதர்
5.இடைக்காட்டுச் சித்தர்
6. குதம்பைச் சித்தர்
7. புண்ணாக்குச் சித்தர்
8. ஞானச்சித்தர்
9. மௌனச் சித்தர்
10. பாம்பாட்டிச் சித்தர்
11. கல்லுளி சித்தர்
12.கஞ்சமலைச் சித்தர்
13. நொண்டிச் சித்தர்
14. விளையாட்டுச் சித்தர்
15. பிரமானந்த சித்தர்
16. கடுவெளிச் சித்தர்
17. சங்கிலிச் சித்தர்
18. திரிகோணச்சித்தர்

இது  மற்றொரு  பட்டியல்.  இந்தப்  பட்டியலில் நவநாத சித்தர்களும் அடங்குவர்.

1. வான்மீகர்
2. பதஞ்சலியார்
3. துர்வாசர்
4. ஊர்வசி
5. சூதமுனி, 
6. வரரிஷி
7. வேதமுனி
8. கஞ்ச முனி
9. வியாசர்
10. கௌதமர் - இது இன்னொரு  பட்டியல்.  

பெரிய  ஞானக்கோவை சித்தர்கள் நாற்பத்தெண்மர் என்று இதனிலும் மாறுபட்ட ஒரு பட்டியலைத் தருகின்றது.

1. காலாங்கி
2. கமலநாதர்
3. கலசநாதர்
4. யூகி
5. கருணானந்தர்
6. போகர்
7. சட்டைநாதர்
8. பதஞ்சலியார்
9. கோரக்கர்
10. பவணந்தி
11. புலிப்பாணி 
12.அழுகணி
13. பாம்பாட்டி
14. இடைக்காட்டுச் சித்தர்
15. கௌசிகர்
16. வசிட்டர்
17. பிரம்மமுனி
18. வியாகர்
19. தன்வந்திரி
20. சட்டைமுனி
21. புண்ணாக்கீசர்
22. நந்தீசர்
23, அகப்பேய்
24. கொங்கணவர்
25. மச்சமுனி
26. குருபாத நாதர்
27. பரத்துவாசர்
28. கூன் தண்ணீர்
29. கடுவெளி
30. ரோமரிஷி
31. காகபுசுண்டர்
32. பராசரர்
33. தேரையர்
34. புலத்தியர்
35. சுந்தரானந்தர்
36. திருமூலர்
37. கருவூரார்
38, சிவவாக்கியர்
39. தொழுகண்
40. நவநாதர் 
(அ. சத்ய நாதர்,  
ஆ. சதோக நாதர்,  
இ. ஆதி நாதர், 
ஈ. அனாதி நாதர், 
உ. வகுளி நாதர்,  
ஊ. மதங்க நாதர்,  
எ. மச்சேந்திர நாதர், 
ஏ. கஜேந்திர நாதர், 
ஐ. கோரக்க நாதர்)
41. அஷ்ட வசுக்கள்
42. சப்த ரிஷிகள்.

இப்படிச் சித்தர்கள் பட்டியல்  கணக்கில்லாமல் பெருகிக்கொண்டே செல்கிறது. கிடைத்தவை இவைமட்டுமே.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எம் முன்னோர்கள் பேசிய பழமைக்குப் பழமையும்,  புதுமைக்குப் புதுமைகொண்ட  மொழி எம் தாய்மொழி தமிழ்..!

இவ்வளவு சிறப்பு வாய்ந்தது நம் மொழி
பெருமை கொள்வோம்

Saturday, August 1, 2020

To the kind attention of our   

                 leaders!


Dear Comrades,


Four months have passed after the curfew in partial and full sometimes,was introduced here, in India in the name of  'lockdown', which we never tasted in our life unlike the people of Jammu & Kashmir.

The Corona initially started spreading in China as Endemic grew to Epidemic and reached a stage of pandemic while it hit hard globally. The living conditions of entire humankind throughout the world and their life style are totally changed upside down. As usual the pandemic disease drives the poor to the wall and turn their life miserable. The failure on the part of the Central Government due to its delayed response to the viral disease and the sudden announcement of the Union Goverment on 'Lockdown', from 24th March, 2020 after a volunteer 14-hour curfew for just 21 days. Now we are in August,2020 with the lockdown being not lifted. Everyone of us has gained a lot of experiences and the social outlook of the different walks of people changed considerably. Still we do have many a chance to learn the attitude of the rulers and the reactions of the people thereupon. 


Taking the cover of Covid-19, as openly declared by our much more learned Hon'ble FM, this present government at the centre in the name of policies and reforms, dare to change the face of our Nation by dismantling the PSUs through privatisation, announcing NEP and EIP hastily without adhering to any democratic norms hitherto followed by the Union Government though ruled by the political parties of various combinations. The multifaceted attacks one side by the pandemic and all other sides by the government through such hasty measures so as to favour the corporates turn the Nation as a melting pot.


Amidst all confusions and misgivings the whole Nation is subjected to, let us see the condition of our house, the BSNL which was disarrayed already.The commitment and promises given openly and in Parliament officially on revival of BSNL are kept unfulfilled. The launching of 4G is put on hold through litigation and the revival of BSNL as a cabinet decision took the back seat amidst Covid19. Even after the half of the work force went on VRS, the timely disbursement of monthly pay and allowances couldn't be realisable. The voice of pensioners is faded to nothing. The interest and the untiring attempt of BSNL management to convince our leaders to switch us en masse from MRS to CGHS do not reflect in settling of other issues of pensioners. Our members are put into lot of difficulties in getting in-patient admissions in the empanelled hospitals and the option of both 'with and without' vouchers does not help them. The empanelled hospitals, it is reported, stopped cashless treatment and we have to pay in advance the estimated cost for the treatment and the medicines. How many of us are capable of paying the lump sum money required to treatment? The condition of CGHS optees also remain the same. This is the main grievance of the pensioners everywhere. 


No bit of progress could be achieved either by our Association or by others. Pension revision becomes a day dream! But the Union Government is consciously and boldly implementing its programmes one by one. Now the Railway Department raises alarming voice regarding non availability of funds in the coming months to give the monthly pay to its employees as happened in BSNL. Pension payment also becomes a major issue. 


The main grievances of our members are pension revision and the effective medical reimbursement. But it is really unfortunate that no association of pensioners do anything for the settlement of these demands. Our Association unlike others is the biggest one having 53,000 life members as declared by our President and the General Secretary. That's why we are able to collect donations and the members with loyalty respond overwhelmingly to the call of our Association.  Never in the recent history of TU movement in Telecom, such a very huge amount as donation was collected. Within a span of one year or more, after donating about 50 lakhs of rupees to Hon'ble Minister Prahlad Joshi in lieu of cyclone Gaja, now we donate about Rs.1crore and 4 lakhs to PM CARES collected  through Circle Branches and directly by members. Now it is learnt that the PM CARES is a trust handled by a group of trustees and this  amount will not be transferred to NDRF. This affidavit is submitted by the said body before the Supreme Court against a case filed to know the fate of the fund in future. We could not know where our money donated will go. 


Now our members are curiously asking about the MRS case and the pension revision. They may, as myself, have a hope that as we did our duty perfectly by generous donations, our long pending genuine problem of medical claims would be looked into. But no improvement till date! The pension revision also finds no light even after the  VRS was inplemented.


We are constrained to state that we are not able to convince our members in divisional level. After re-opting for without voucher, no amount was given by the BSNL. This hardships being faced by us could not be allowed to continue unendingly for one or other reasons.


So our leaders are requested to do the needful without further delay so that the confidence hitherto instilled in the minds of our members towards our Association is not shattered badly.


Yours comradely,

N.Veerapandian

02-08-2020

Thanjavur SSA


 



Wednesday, July 29, 2020

பாரதியும், பகத்சிங்கும்

பாரதி வாழ்ந்த காலத்தில் அவருக்குக் கிடைத்திருக்க வேண்டிய உரிய அங்கீகாரம் இறந்த பிறகுதான் வந்தது. அதற்குப் பல காரணங்கள். குறிப்பாக அவரது ஏழ்மை. அவர் பிறந்த குலம் கிட்டத்தட்ட அவர்களது சமூகத்திடமிருந்து ஒதுக்கியே வைத்திருந்தது. அவரை ஆதரித்து உதவியவர்கள் பெரும்பாலும் அவர் ஜாதிக்கு அப்பாற்பட்ட சமூகத்தின் கீழடுக்கைச் சார்ந்தவர்களே. மகாத்மா காந்தியை சென்னைக் கடற்கரை கூட்டத்திற்கு அழைக்கச் சென்றவரின் யதார்த்தமான செய்கைகள், அங்கிருந்தோரை அதிர்ச்சியுறச் செய்தது. இராஜாஜி அவரை மகாத்மாவுக்கு அறிமுகம் செய்து வைத்ததாகச் சொல்லப்படுகிறது. கூட்டத்திற்கு வர இயலாததை மகாத்மா தெரிவித்ததும் பாரதி அங்கிருந்து மிடுக்கோடு வெளியே போனார். இராஜாஜியைப் பார்த்து, 'இவர் நாட்டின் பொக்கிஷம். பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்', என சொன்னார். சொன்ன சொற்களில் வேறுபாடு இருக்கலாம். ஆனால் நிகழ்வு உண்மையே. அவர் செய்தித்தாள் ஆசிரியராக, கவிஞராக மிளிர்ந்தார் எனினும் ஆங்கில அரசால் தொடர்ந்த கண்காணிப்புக்கும், சிறையிடப் படுதலுக்கும் ஆளாகி, புதுச்சேரியில் அடைக்கலம் தேட வேண்டியதாயிற்று. பாரதியின் வாழ்க்கை வரலாறை சொல்வது நோக்கமல்ல. இறுதியில் அவர் சென்னையில் இறந்த போது அவரை அடக்கம் செய்யச் சென்றவர்கள் எண்ணிக்கை, தமிழ் கூறும் நல்லுலகம் அம்மாபெரும் கவிக்குத் தந்த அங்கீகாரத்தை பறைசாற்றும். போலித்தனமும், சமூகத்தில் பட்டம், பதவி, பணம் மூலம் பெறும் செல்வாக்குமே சமூக அந்தஸ்தை தீர்மானிக்கும். அதை அடையும் முயற்சியில் வெற்றி பெற்றவர்கள் பெரிய மனுஷர்களாக வலம் வருவது எக்காலத்திற்கும் பொருந்தும் போலும்! பாரதி இச்சூதறியா ஏழைச் சாமானியன்.
ஆகவே வறுமையினின்றும் அவன் குடும்பம் இறுதி வரை மீளவில்லை.

மறைந்த பின், அவனுக்குக் கிடைத்த அங்கீகாரத்தில் நூறில் ஒரு பங்கு, அவன் உயிரோடிருந்த போது கிடைத்திருந்தால் இன்னும் ஓர் இருபது, முப்பது ஆண்டுகள் வாழ்ந்திருப்பான். இன்னாது அம்ம இவ்வுலகம்!

தமிழகமும், இந்தியாவும் கொண்டாடத் துவங்கியபின் வந்த இளைய தலைமுறை பாரதியைப் புரட்சிக் கவிஞனாகவும், முற்போக்குச் சிந்தனையாளர்களின் அடையாள நாயகனாகவும் தமிழ்நாட்டில் உயர்த்திக் காட்டி தங்களையும் உயர்த்திக் கொண்டனர். அவன் வாழ்ந்த போது தாங்கள் பிறக்கவில்லையே என கவிஞர் பட்டாளமும், அறிஞர் பெருமக்களும் குமுறாத நாளில்லை. குமுறும் அளவைப் பொறுத்து 'முற்போக்குச் சந்தையில்' அவர்களது விலை எகிறியது. கவியரங்கங்கள், பட்டிமன்றங்கள், கருத்தரங்குகளில் எல்லாம் பாரதியின் அழியா கவிதைகளை ஏற்ற இறக்கங்களோடு முழக்கி 'மார்க்கெட்டில்' தங்கள் 'ரேட்'டை உயர்த்திக் கொண்டனர். அவன் உயிரோடிருந்து வறுமைத் தீயில் கருகிய போது அவனை வாழ்விக்க வராத தமிழகத்தில், அவன் மறைந்த பின் பலருக்கு தன் கவிதைகளால் வாழ்வித்தான். அவன் இல்லாததால் யாருக்கும் பிரச்சினை இல்லை; இருந்திருந்தால் இப்போதைய சூழ்நிலையில், 'ஜாதிகள் இல்லையடி பாப்பா; குலம் தாழ்த்தி உயர்த்தி சொல்லல் பாவம்' எனப் பாடிய அக் கவிஞன் படும் பாட்டை கற்பனை செய்தாலே மனம் கலங்குகிறது. பிஜித் தீவுக்கும், ஏனைய நாடுகளுக்கும் பிழைப்பு தேடிச் சென்று கற்பைப் பறி கொடுத்த ஏழைப் பெண்கள் உற்ற துயர் பாரதியின் மனதைக் கலக்கியது. கரும்புத் தோட்டத்தில் பட்ட துயரை கண்ணீர் வழிய பாடியவன் பாரதி. நம் நாட்டின் எல்லை தாண்டி உலகில் நடந்த நிகழ்வுகள் பால் கருத்தைச் செலுத்தியவன். ஆகவேதான் மாகாளி கடைக்கண் வைத்ததால் எழுந்ததாக, ஜார் ஆட்சி வீழ்ந்ததை யுகப் புரட்சி என அவனால் அடையாளம் காண முடிந்தது.

பகத்சிங்! இளம் வயதில் வயதுக்கு மீறிய சிந்தனை. கேளாக் காது படைத்த பிரிட்டிஷ் அரசாங்கத்திற்குத் தங்கள் குரலை கேட்கச் செய்திட பாராளுமன்றத்தில் ஆளைக் கொல்லாமல், அதிர்வேட்டு போட்டவன். அவனும் அவன் நண்பர்களும் தண்டிக்கப்பட்டனர். தூக்கு மேடைப் பரிசு. வாழத் துடிக்கும் இளம் வயதில் சாகத் துடித்த நாத்திகன். தூக்கு மேடைக்குச் செல்ல வேண்டிய நாளுக்கு முதல் நாள் இரவில் சிறையில் மார்க்ஸோடு உரையாடிக் கொண்டிருந்தவன். ஆம்! சிவப்பு புத்தகங்களைப் படித்துக் கொண்டிருந்தான். மார்க்சிய சித்தாந்தம் அவன் சிந்தனையைக் கவ்விப் பிடித்திருந்தது.

காந்தி- இர்வின் ஒப்பந்தத்தில் ஓர் அம்சமாக, நிபந்தனையாக அவனது விடுதலை பேசப் பட்டிருந்தால் அவன் தூக்கில் தொங்க வேண்டியது தவிர்க்கப் பட்டிருக்கும். தீவிரவாதம், தீவிரவாதியோடு அழிய வேண்டும் என்பது எழுதாத விதி! அந்த வயதிலேயே கூரிய சிந்தனை இருந்ததால்தான்  'நான் ஏன் நாத்திகன்?' என்ற நூலை எழுத முடிந்தது. பகுத்தறிவாளனாக மிளிர்ந்த அவன் இராஜபாட்டையில் நடைபோடவில்லை. பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதி ராய் ஊர்வலத்தில் தாக்கப்பட்டு படுகாயமுற்ற சில நாட்களில் மரணமுற்றார். அக்கொடுமையைத் தாங்காத அவனும் அவன் நண்பர்களும் ஆயுதமேந்த வேண்டி வந்தது. இன்றும் அவனது வீரமும், தியாகமும் ஒப்புயர்வற்று விளங்குகிறது. 

இவர்கள் இருவர் பற்றியும் குறிப்பாக இங்கு இப்போது சொல்ல வேண்டிய அவசியம் ஏன்? ஒளிமிகுந்த மேடைகளில் வலம் வந்து நித்தம் தாங்கள் யார் என்பதை பாமரர்களுக்கும், படித்த மேட்டுக்குடி மக்களுக்கும் அறிமுகம் செய்து கொள்பவர்கள் 'நாங்கள் பாரதி பரம்பரை, பகத்சிங் பரம்பரை' நெஞ்சு புடைக்க விம்மி முழங்குவதைப் பார்க்க முடிகிறது. 'பாரதி இழுத்த தேர் வடம்   இங்கு வீதியில் கிடக்கிறது, பற்றிப் பிடித்து  தேரினை இழுக்க ஊர் கூடி வாருங்கள்' என ஓங்கியழைக்கும் குரல்கள் இன்றும் ஓய்வதில்லை. பகத்சிங் பற்றிப் பேசும் போதும் கழுத்து நரம்புகள் புடைக்க முகம் சிவக்க பகத்சிங்கே எழுந்து வந்ததுபோல் ஆடும் சாமியாட்டத்திற்கும் குறைவிருக்காது. அப்படியே அவர்கள் பரம்பரை பெருமை பேசட்டும்! ஆனால் கொஞ்சமேனும் அவர்களைப் போல் சமூக அக்கறை, அநீதி கண்டு வெகுண்டெழும் பண்புகளோடு செயல்பட  வேண்டாமா?

பாரதியைப் போல ஒரு கவிஞன் வர வர ராவ், மனித உரிமைச் செயல் பாட்டாளர் சுதா பரத்வாஜ், ஆனந்த் டெல்டும்லே உள்ளிட்ட பதினொரு பேர் சுதந்திர இந்தியாவில் எழுபது ஆண்டுகளுக்குப் பிறகும் புல்லாய், புழுவாய், பூச்சிகளாய் சிலர் கண்களுக்குத் தெரியும் மனிதர்களுக்காய் தளராது குரல் கொடுப்பவர்கள். இன்று கறுப்புச் சட்டங்களால் சிறைக் கொட்டடிக்குள் அடைக்கப்பட்டு சித்திரவதைகளுக்கு ஆளாகி இருக்கிறார்கள். குற்றப் பத்திரிக்கை மட்டுமே வழங்கப்பட்டு விசாரணைக் கைதிகளாய் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தனிமைச் சிறையில் வாடும் கவிஞர் வர வர ராவ் 81 வயதில் முதுமையில் வரும் வியாதிகளோடு கொரோனாவால் பாதிக்கப்பட்டும் பிணையில் விட மறுத்தது மட்டுமன்றி மருத்துவ மனையில் சேர்ப்பது பற்றிய பொறுப்பு இன்றி மகாராஷ்ட்டிர அரசு இருந்தது. ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் பிணை தர பரிசீலித்த நேரத்தில், வழக்கின் விசாரணையை மத்திய அரசின் என்.ஐ.ஏ அமைப்பு நேரடியாக எடுத்துக் கொள்வதாக அறிவிக்கிறது. விளைவு? பிணையில் வருவதற்கான வாயில் முற்றாக அடைபட்டுவிட்டது. அவர்கள் கைது செய்யப்பட்டது ஏன் என்பதும் அது பற்றிய பின்னணியும் ஒரு பக்கம் இருக்கட்டும். சிறைக் கைதிகளுக்கான உரிமைகள் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டதா என்பதுதான் கேள்வி.

சிறுமிகளை, இளம் பெண்களைக் கதறக் கதறக் கற்பழித்தும், கொலை செய்தும் தொடர் குற்றங்களைச் செய்த சாமியார்கள், காவிப் போர்வையில் புகுந்து கொண்டு கோவில்களுக்குள் சிறுமிகளைக் கடத்தி, கற்பழித்த ஆளும் கட்சி அரசியல் வாதிகள் எளிதில் வெளிவர சட்டம் இலகுவாக இருக்கிறது. நீதிமன்றங்களில் உயர் நிலையில் இருக்கும் நீதியரசர்கள், ஓய்வு பெற்றபின் உயர் பதவிகளைப் பெற நீதியை வளைத்து உதவவும் தயாராக இருக்கிறார்கள் என்பது பற்றிய செய்திகள் கொஞ்சம் நஞ்சம் நீதிமன்றங்கள் மேல் இருக்கும் நம்பிக்கையையும் இழக்கச் செய்கிறது. ஏழை எளியவர்கள் என்ன செய்வார்கள்?
அவர்களுக்காகக் குரல் எழுப்பும் மனித நேயம் மிக்கவர்கள், சுகமான வாழ்க்கை வாழ்வதை விட்டு அவர்களுக்கானப் போராட்டத்தில் வலிந்து கொடும் தண்டனைகளுக்கும், சிறைக் கொடுமைகளுக்கும் ஆளாவதை நம்மால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

பாரதியும், பகத்சிங்கும் இன்னும் நூற்றுக்கணக்கான மாமனிதர்களும் செய்த தியாகங்களைப் போற்றிப் புகழ்வதோடு அவர்கள் வாரிசுகள் நாங்கள் என்றும், வழி வந்தவர்கள் என்றும் மேடைதோறும் முழங்குவதன்றி வேறென்ன செய்கிறோம்? நம் காலத்தில் நம் முன் வாழ்கின்ற தியாகிகளை, கதியற்ற மக்களுக்காய் வாழ்க்கையை அர்ப்பணம் செய்பவர்களை கிஞ்சித்தும் நினைப்பதில்லை. காங்கிரஸ் தீவிரவாதக் குழுவில், திலகர் தலைமையை ஏற்று செயல்பட்டவர்கள் பாரதியும், வ உ சி யும் அவர்களைச் சார்ந்தவர்களும். அதனாலேயே அவர்கள் வாழ்ந்த காலத்தில் சமரசமற்ற போராட்டங்களை நடத்தியதாலும், அரசியல் ரீதியான ஆதரவில்லாததாலும் வெள்ளை அரசாங்கத்தின் நேரடித் தாக்குதல்களுக்கு ஆளாகினர். இன்று அவர்களைக் கொண்டாடி நம்மை அவர்களோடு அடையாளப் படுத்துவதோடு நின்று விடுகிறோம். அந்நாளையப் புறக்கணிப்பாளர்களைப் போலவே நாம் ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி, அவர்களிடமிருந்து விலகிப் பாதுகாப்பான நிலையில் நம்மை இருத்திக் கொண்டு போலிப் புரட்சி பூபாளம் இசைத்து பிழைப்பை நடத்துகிறோம். ஆனாலும் அக் கொடுமைகளுக்கு ஆளாகும் மனிதர்களுக்காய் குரல் கொடுக்கும் சக மனிதாபிமானிகள் இப்போதும் நம் கண் முன்னே உலவத்தான் செய்கிறார்கள். மனம் தளராது அமைதியாக ஆனால் மனத் திண்மையோடு பாசிச அரசை எதிர்த்து அவர்கள் நடத்தும் கருத்துப் போருக்கு சில சமயங்களில் நீதிமன்றங்கள் அசைந்து கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு விடுகிறது. மேலே குறிப்பிட்ட அம் மாமனிதர்களை, விடுவிக்க வரலாற்றாளர் ரொமிலா தாப்பர் முதல் தன்னார்வச் செயல்பாட்டாளர்கள், அறிஞர் பெருமக்கள், அருந்ததி ராய் வரை அரசுக்கும், நீதிமன்றங்களுக்கும் விடுகின்ற வேண்டுகோள்களின் நியாயங்கள்,  தாமதமானாலும் மருத்துவ மனையில் சேர்ப்பதற்கும், பிணையில் வெளிவருவதற்கான வாய்ப்புகளை உருவாக்கவும் இன்று உதவியிருக்கிறது. இந்தக் குழுவினரின் அங்கமாக, கட்சி அரசியலுக்கு அப்பால், மனித உரிமைப் பாதுகாவலர்களாக என்று மாறப் போகிறோம்? 

அந்நாளே, பாரதியும், பகத்சிங்கும், அவர்கள் போன்ற மாவீரர்களின் படை வரிசையில் அணிவகுக்கும் வீரர் நாம் எனச் சொல்ல நம்மைத் தகுதியாக்கும் நாள்.

எண்ணித் துணிவோம்! உண்மை வாரிசுகளாய் மிளிர்வோம்!










Monday, July 27, 2020

               கடல்
ஆர்த்தெழுந் தென்ன?
ஆர்ப்பரிப்பில் பயனென்ன?
கூர்த்தமதி பெற்றநின்
சீர்த்திறமுன் நான்சிறியோன்.

பொங்குநுரை கரையெறிந்து
அலையலையாய் வந்தென்ன?
தங்குபுகழ் புரைதீர்நின்
சிந்தனைமுன் நான்வறியோன்.

                ஞானி

என்னைநீ பார்க்கின்றாய்
ஏதேதோ உரைக்கின்றாய்
கரைமணலை நனைக்கும்உன்
கரம்பட்டே சிலிர்க்கின்றேன்

ஓய்வுதுளியின்றி ஓலமிடுங்கடலே!
அலைபாயும் என்மனதின்
அழுங்குரலைக் கேட்டாயோ?
நிலைமாறித் தடுமாறும்
தமிழர்தம் நிலையெண்ணி
ஏங்குமென் முகம்பார்த்து
எள்ளல்நகை புரிந்தாயோ?

ஓங்காரமிடும் உனைப்போல்
பொங்கியெழும் வண்தமிழர் 
ஆங்காரம் கண்டலறும்
கணவாய்க் கூட்டத்தின்
கதைமுடித்த சேதிவரும்.

கதைமுடித்த சேதிவரும்
அந்நாளில் நீயிருப்பாய்!
அன்றுநான் சொன்னதெண்ணி
நெடுங்கடலே நீ சிரிப்பாய்!


கடலும் ஞானியும்- கற்பனை உரையாடல்.







































Friday, July 24, 2020

கொரோனா காலச் சிந்தனைகள்

நீதித்துறை சீர்திருத்தம் - உடனடித் தேவை

1950, ஜனவரி 26 ஆம் நாள் இந்தியா குடியரசாக அறிவிக்கப்பட்டது. ஜனவரி 28 முதல் நீதித்துறையின் கீழ் சுதந்திர இந்திய நீதிமன்றங்கள் செயல்படத் துவங்கின. இன்று 70 ஆண்டுகளை நிறைவு செய்து 71 ஆம் ஆண்டில் நடை பயிலும் வேளையில், நீதி மன்றங்களின் செயல்பாடுகளில் ஏற்பட்டிருக்கும் தேக்க நிலையைப் போக்கி விரைந்து செயல்பட வேண்டிய தேவைகளை அனைவரும் உணரவும், கவலையோடு விவாதிக்கவுமான நல்ல சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. உலகின் ஆகப்பெரிய ஜனநாயக நாட்டில், பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப அதிகரிக்கும் சிவில், கிரிமினல் வழக்குகளின் மீதான தீர்ப்புகள் வருவதிலான அசாதாரண தாமதம், மக்கள் நீதி மன்றங்கள் மீது வைக்கும் நம்பிக்கை தகர்ந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது. சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தும் தலையாய கடமையும், பொறுப்பும் நீதித்துறையின் இயங்கு தளங்களாக விளங்கும் நீதிமன்றங்களின் தோள்களில் சுமத்தப்பட்டுள்ளன. தகவல் தொடர்பில் எண்முறை (digital) தொழில் நுட்பத்தின் வரவு, அனைத்துத் துறைகளின் செயல்பாடுகளில் யாரும் கற்பனை செய்ய இயலாத அளவுக்குப் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது. இம் மாற்றங்கள் ஒரே சீரான வேகத்தில் அனைத்துத் துறைகளிலும் வர முடியாது என்பது நடைமுறை உண்மை என்றாலும், மாற்றத்தை நோக்கிய அடிகளை எடுத்து வைக்க வேண்டிய அவசியத்தை தள்ளிப்போட முடியாது. இந்திய நீதித்துறையும் இதற்கு விதிவிலக்கல்ல.

சுதந்திர இந்தியாவின் உச்சநீதிமன்ற முதல் நீதிபதி ஹரிலால் கனிகா,'இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் வெவ்வேறு பிரிவுகளில் சில, ஒன்றுக்கொன்று முரண்பாடு உள்ளவையாக இருக்கின்றன. சிக்கலாக அவை உருவெடுக்கும் போது, அதை சரிசெய்ய வேண்டிய கடமை நீதிமன்றங்களுக்கு இருக்கிறது' என உச்ச நீதி மன்ற துவக்கத்தில் குறிப்பிட்டார். 70 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய நீதிமன்றங்கள், அரசதிகார வரம்பு மீறல்களை முறியடித்தும், மக்களுக்கான அடிப்படை உரிமைகளுக்கு வரும் ஆபத்தை பல கட்டங்களில் தடுத்து நிறுத்தியும், நீதிமன்றத்தை நாடி தங்கள் பாதிப்பை சரி செய்து கொள்ளக் கூடிய அளவுக்குப் பொருளாதார வசதியற்ற மக்கள் தொகுதிக்கு ஆதரவாக முன்கை எடுத்து காப்பாற்றியும், பொதுநல வழக்குகளைத் தானே முன் வந்து ஏற்று நடத்தி, ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை அற்றுப் போகாத வண்ணம் பெரும் பங்காற்றி உள்ளன. வரலாற்றுப் புகழ் மிக்க தீர்ப்புகளை வழங்கிய நீதியரசர்களின் நீண்ட பட்டியலே உள்ளது. வி.ஆர்.கிருஷ்ணய்யர், ஓ.சின்னப்ப ரெட்டி தொடங்கி மார்க்கண்டேய கட்ஜு மற்றும் சமீபத்தில் ஓய்வு பெற்ற செலமேஸ்வரர் வரை பலரை நாம் மறக்க இயலாது. ஆனாலும் நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கையும், தீர்ப்பு வருவதற்கான காலத்தின் அதிகரிப்பும் நீதிமன்ற நடைமுறைகளில் குறிப்பாக குற்றப் பின்னணி (criminal) வழக்குகளில் மேற்கொள்ளும் நடைமுறைகளில் சீர்திருத்தங்களைக் கொண்டு வர வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் மீதான விவாதங்கள் விரிவான தளங்களில் எதிரொலிக்க வேண்டும்.

சமீபத்தில் நம் கவனத்தை ஈர்த்த சில வழக்குகள் பற்றிய செய்திகளும், சமூக அக்கறையுள்ள சில வழக்கறிஞர்கள் பத்திரிக்கைகளில் எழுதிய கட்டுரைகளும் நம்மை சிந்திக்க வைத்தன. விளைவே இக் கட்டுரை. 

தமிழ்நாட்டின் தென்மாவட்டத்தைச் சேர்ந்த சாத்தான்குளம் தந்தை, மகன் இரட்டைக் கொலையில், சென்னை உயர் நீதி மன்ற மதுரை அமர்வு சற்றும் தாமதமின்றி எடுத்த சீரிய  நடவடிக்கை காரணமாக காவல்துறையினர் குற்றவாளிக் கூண்டில் நிற்கும் நிலை ஏற்பட்டது. மக்கள் மத்தியில் எழுந்த கொந்தளிப்பின் வெம்மையை உணர்ந்த மாநில அரசாங்கம், சிபிஐ விசாரணைக்குப் பரிந்துரைத்தது. இப்போது சிபிஐ விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நேரத்தில் வந்த ஒரு செய்தி நமக்கு கவலை தருவதாக உள்ளது. 1985 ஆம் ஆண்டு இராஜஸ்தானில் நடந்த கொலை மீதான வழக்கில் முப்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தீர்ப்பு வந்துள்ளது. குற்றவாளிகளாய் நிரூபிக்கப்பட்ட ஒரு காவல் துணைக் கண்காணிப்பாளர் உட்பட பதினொரு காவல்துறையினருக்கு மதுரா செசன்ஸ் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது. கொலையுண்டவர் ஏழுமுறை இராஜஸ்தான் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட சுயேச்சை உறுப்பினர். ஜோத்பூர் மாவட்டத்திலுள்ள பரத்பூர் சமஸ்தானத்தின் பட்டத்து இளவரசரான இராஜா மான்சிங். காவல் நிலையத்திற்கு சரணடையச் செல்லும் போது, இடையில் காவல்துறையினர் வழி மறித்து அவரையும் அவர் உதவியாளர் இருவரையும் மோதலில் (Encounter) சுட்டுக் கொன்றதே வழக்கு. குற்றவாளிகள் அனைவரும் காவல்துறையினர். கொலையுண்டவர் மக்கள் பிரதிநிதி என்பதோடு மன்னர் பரம்பரையைச் சேர்ந்தவர். அவர் சமூகத்தின் உச்ச மட்டத்தில் இருந்தவர் என்பதால் அல்ல; பொருளாதார ரீதியாக வழக்கை சந்திக்கும் வல்லமை பெற்ற குடும்பம். அப்படி இருந்ததால்தான் விடாப்பிடியாக,  வழக்கு இழுக்கடிக்கப் பட்டாலும், தீர்ப்பை பெற முடிந்தது. ஆனால் அதற்கு முப்பத்தைந்து ஆண்டுகள் காத்திருக்க வேண்டி வந்தது. இதுவும் இறுதியானதல்ல; இந்த செசன்ஸ் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய உயர்நீதி மன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை பல மேலமை நீதி மன்றங்கள் உள்ளன. இறுதியாகத் தண்டனையை அடையும் போது, அதை அனுபவிக்க எவ்வளவு பேர் உயிரோடு இருப்பார்கள் என்பது யாருக்கும் தெரியாத ஒன்று. இவ்வழக்கின் போக்கைப் பார்க்கையில் சாத்தான்குளம் வழக்கு என்ன ஆகுமோ என்ற கவலை அதிகரிக்கிறது. 

இது போன்று மிகத் தாமதமாக தலைமுறைகள் கடந்து தீர்ப்புகள் வந்த வழக்குகள் பல உள்ளன. 1975 ஆம் ஆண்டு ஜனவரியில் அன்றைய இரயில்வேத்துறை அமைச்சராக இருந்த லலித் நாராயண மிஸ்ரா கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் செய்தவர்கள் 2014 இல் வந்த தீர்ப்பு மூலம் தண்டிக்கப்பட்டனர். தீர்ப்பு வெளி வர 39 ஆண்டுகள். 1987 இல் ஹஸிம்புராவில் 40 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு 2015 இல் தீர்ப்பு வெளியாயிற்று. தீர்ப்பு என்ன தெரியுமா? குற்றவாளிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். பின் அவ்வளவு பேரையும் கொலை செய்தவர்கள் யார்? நல்ல வேளை. மேல் முறையீட்டில் டெல்லி உயர்நீதி மன்றம் மேலும் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 16 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை அளித்ததன் மூலம் நீதிமன்றத்தின் மீதான மக்கள் நம்பிக்கையைப் புதுப்பித்துக் கொண்டது. ஆக இதுபோன்ற கொடுமையான குற்ற வழக்குகளில் இறுதித் தீர்ப்பு வர இவ்வளவு தாமதத்தை எவ்வாறு ஏற்க இயலும்? வழக்கு மன்றத்திற்குச் சென்று ஆண்டுக் கணக்கில் நியாயம் கிடைக்க அலைக்கழிக்கப்பட்டு அழிந்த குடும்பங்கள் பற்றிய கதைகள் நம் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் உலவி வருவதை நாம் அனைவரும் அறிவோம். குற்றம் செய்தவர்கள் கூட தப்பிக்கலாம், ஆனால் குற்றமற்றவர்கள் சிறிதும் தண்டிக்கப்படக் கூடாது என்னும் உயர்ந்த அறநெறியைக் காப்பதற்காக, நீதிமன்றங்களுக்கு வெளியே குற்றம் செய்யாதவர் குடும்பங்கள் சிதைந்து போவதைப் பற்றிய கவலையும் அதையொட்டி எழும் விவாதங்களும் இன்று கூர்மை அடைந்துள்ளன. இவை எல்லாம் நீதித்துறையின் சீரமைப்பைக் கோருகின்றன. 

உச்ச நீதிமன்றத்தின் முப்பெரும் பணிகளில் ஒன்று அரசியல் அமைப்புச் சட்டம் தொடர்பான வழக்குகளில் நீதி வழங்குதல். இவ்வாறு வழங்கும் தீர்ப்புகளை தாமதமின்றி அமுல்படுத்துவது, அச்சட்டத்தைப் பாதுகாப்பதில் முக்கியப் பிரதிநிதிகளாக இருக்கும் மத்திய, மாநில அரசுகள் மற்றும் ஆளுநர்களின் தலையாய கடமை. ஆனால் அதன் இன்றியமையாமையை உணராத போக்கு அதிகரித்திருப்பதும், தாமதம் பற்றிய பொறுப்பின்மையும் நீதியை நிலைநாட்டும் கருவிகள் மீதான ஐயத்தை மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. இராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு ஆயுள் தண்டனையை அனுபவித்து வரும் கைதிகள் இருபத்தொன்பது ஆண்டுகளுக்கு மேலாகியும் விடுதலை செய்யப்படவில்லை. நன்னடத்தை மற்றும் தலைவர்களின் பிறந்த நாள் அல்லது தேசிய, மாநில அரசுகளின் முக்கிய விழாக்களை ஒட்டி இதே போன்ற குற்றத்தைச் செய்து ஆயுள் தண்டனைப் பெற்றவர்கள், தண்டனைக் காலம் குறைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டும், பேரறிவாளன் உட்பட ஏழு பேருக்கு இன்னும் விடியவில்லை. இது குறித்த போராட்டங்கள், வழக்குகள் எல்லாம் நடந்து முடிந்து இறுதியில் மாநில அரசு, சட்டசபையில் ஒரு மனதான தீர்மானம் நிறைவேற்றி, விடுதலையைப் பரிந்துரை செய்து, ஆளுநருக்கு முறையான கடிதமும் அனுப்பியது. இதுவரை ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சென்னை உயர்நீதிமன்றம், 'எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைப்புச் சட்டத்தின் பிரதிநிதியாக உள்ள அதிகாரி கோப்பை வைத்துக்கொண்டு இருக்க முடியாது, அமைப்புச் சட்டத்தின் காவலர்கள், நடவடிக்கை எடுப்பதற்கான கால அவகாசத்தை வரையறுக்காத காரணம், அப்பிரதிநிதிகள் மீதான அசைக்கமுடியாத நம்பிக்கையே', என சாடியுள்ளது. சட்டத்தின் காவலர்கள் அதை மீறுவதும், நடைமுறைப் படுத்துவதில் காட்டும் சுணக்கமும் ஏற்படுத்தும் விளைவுகளை எண்ணிப் பார்ப்பதில்லை.

நாடெங்கும் ஜனநாயக முறைப்படி நடக்கும் போராட்டங்களிலும், கொண்டாட்டங்களிலும் சமூக விரோத  சக்திகளைத் தூண்டி, கலகங்களை நடத்தி, அதன் மூலமாக ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளைச் சொல்லி சிலரைக் குறி வைத்து தண்டிக்கும் போக்கு அதிகரித்துள்ளது. 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மகாராஷ்ட்டிர மாநிலத்தில் பீமா கொரேகான் என்னும் இடத்தில் நடந்த வன்முறைக் கலகங்கள், கொரோனாத் தொற்று துவங்கிய நேரத்தில் வடகிழக்கு டெல்லியில் 53 பேர் கொல்லப்பட்டும், பொதுச் சொத்துக்கள் கொள்ளை மற்றும் அழிவுக்கு ஆளாக்கப்பட்டும் நடந்த திட்டமிட்ட கலவரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் நீதிமன்ற விசாரணை ஏதுமின்றி சிறையில் வாடும் இளைஞர்கள், மாணவர்கள், அப்பாவிப் பொதுமக்களின் எண்ணிக்கை தெரியாது. தொலைக்காட்சி ஊடகங்களுக்கு இது TRP ஐ எகிறச் செய்யும் பிரச்சினை அல்ல. பீமா கொரேகான் கலவரத்தை ஒட்டி மகாராஷ்ட்டிர அரசின் 'சட்டப்புறம்பு நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்' படி
 (UAPA) பதினோரு பேர் தனிமைச் சிறைகளில் பல்வேறு இடங்களில் அடைக்கப் பட்டுள்ளனர். அறிஞர்கள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், மக்கள் இயக்கச் செயல்பாட்டாளர்கள் எனப் பலரும் அடங்குவர். பல்வேறு ஆபத்தான நோய்களுக்கு ஆளாகி அவதிப்படுவதை உறுதிப் படுத்தும் அதிகாரப் பூர்வ மருத்துவச் சான்றிதழ்களை நீதிமன்றம் முன் அளித்த பிறகும் பிணையில் விடுவதற்கும் கூட நீதிமன்றங்கள் தயாரில்லை. பிணைக்கான பூர்வாங்க நடைமுறைகளை முடிக்கவே பல மாதங்கள் ஆகின்றன. அதற்குப்பின்னும் நீதிமன்றம் மறுப்பது தொடர்கிறது. உடல்நிலை மோசமாகி, உயிருக்கு ஆபத்தான நிலையில்தான் மருத்துவ மனையில் அனுமதிக்கப்படும் 'உரிமை மீறல்கள்' தடுக்கப் படுவது எப்போது இங்கே சாத்தியம்? யாருக்கும் தெரியாது. 81 வயதான கவிஞர் வர வர ராவ், 64 வயதான சுதா பரத்வாஜ், டெல்லிப் பல்கலைக்கழக ஆங்கில இலக்கியப் பேராசிரியர் சாய்பாபா ஆகியோர் சமீபத்திய எடுத்துக்காட்டுகள்.
நீதித்துறைதான் மனிதாபிமான அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் எடுப்பதில்லை. பெருங்கொடுமையான, நெஞ்சை உலுக்கும் செய்தி என்ன தெரியுமா? தேசிய குற்றப் பதிவு ஆய்வகம் (National Crime Record Bureau) தந்துள்ள விபரம் தான். இந்தியாவில் உள்ள 1400 சிறைகளில் அடைக்கப் பட்டிருக்கும் கைதிகள் ஏறத்தாழ 4.33 இலட்சம். குற்றம் நிரூபிக்கப் படாமல் விசாரணக் கைதிகளாக சுமார் 68% அதாவது ஏறத்தாழ 2,90,000 பேர் ஆண்டுக் கணக்கில் அடைபட்டுள்ளனர். விசாரணைக்கு நீதிமன்றங்களால் அழைக்கப் படாதவர்கள், பிணைத் தொகையைக் கட்டக்கூட வழியற்ற ஏழை மக்கள், பெண்கள், குழந்தைகள் என சமூகத்தின் கீழ்த்தட்டு மற்றும் நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்தவர்கள். இவர்களுள் 63% கைதிகள் SC, ST மற்றும் OBC இனத்தைச் சார்ந்தவர்கள் என்ற செய்தி அதிர்ச்சியையும், ஆழ்ந்த கவலையையும் அளிக்கிறது. இவர்களின் குடும்பம், மனைவி, மக்களின் எதிர்காலம் என்ன ஆகியிருக்கும்? எத்தனைக் குடும்பங்கள் அழிந்தும், அழிவின் விளிம்பிலும் அல்லல் படும்? அவர்கள் ஆற்றாது அழுத கண்ணீர் எத்தகையப் பலம் வாய்ந்தது என்பதை காலம் சொல்லும். பானை பொங்கி வெடிக்குமுன் தீர்வு நோக்கி சிந்திப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்.  

கொரோனா தொற்று பூதாகரமாக கிளம்புவதற்கு முன், மார்ச் 24, 2020 முதல் ஊரடங்கு போன்ற வீட்டுக்குள் முடங்கி இருக்கும் Lockdown உத்தரவை முதல் நாள் 4 மணி நேர அவகாசத்தில், பண மதிப்பிழப்பு அறிவிப்பு போல் அறிவித்து, 138 கோடி மக்கள் தொகுதியை முடக்கியது. அவரவர்கள் அங்கேயே முடங்கிக் கொள்வது என்பதால் ஏற்படப் போகும் விளைவுகள் பற்றிய முன் எச்சரிக்கை மத்திய அரசுக்கு இல்லாததால் இன்று அதன் சீரழிவுகளை நம் மக்கள் பல முனைகளிலும் சந்தித்து வருகிறார்கள். நம் தலைமுறையில் இப்படி ஒரு முடக்கம் மாதக்கணக்கில் தொடரும் என யாரும் எண்ணியதில்லை. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆண்டில் பல மாதங்கள் என தொடர்ந்து பல ஆண்டுகளாக அவ்வப்போது அம்மக்கள் அனுபவிக்கும் ஊரடங்கால் சமூக வாழ்க்கையே எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டிருக்கும் என்பதை இப்போது நாம் உணரமுடிகிறது. மார்ச் மாத முடக்கம் துவங்கும் முன்பே, சென்ற ஆண்டு ஆகஸ்டு 4 முதல், அரசியல் பிரிவு 370 ஐ ரத்து செய்து மாநில அந்தஸ்தை மாற்றி யூனியன் பிரதேசமாக அறிவித்த சட்டம் நடைமுறை படுத்தும் முன் இராணுவக் கட்டுப்பாட்டிலான ஊரடங்கு உத்தரவும் ஆளுக்கட்சி அல்லாத பிற கட்சித் தலைவர்களை வீட்டுக் காவலில் வைக்கும் ஆணையும் பிறப்பிக்கப்பட்டன. நாட்டின் பாதுகாப்பு மற்றும் தீவிரவாத தாக்குதலை முறியடித்தல் என்ற பெயரில் ஒட்டுமொத்த தொலைத் தொடர்புச் சேவை நிறுத்தப்பட்டது. வலைதளச் சேவை 'இண்டர்நெட்' அடியோடு முடக்கப்பட்டது. ஓராண்டு முடியப் போகிறது. மூன்று முறை உச்ச நீதி மன்றக் கதவை தட்டியபின், இப்போது 2G சேவை வரையறைகளோடு தரப்பட்டுள்ளது. ஆனால் அதிவேக 4G சேவை தரப்படவே இல்லை. இதன் அவசியம் பற்றி விளக்க வேண்டியதில்லை. கல்வி, மருத்துவம், வணிகம் போன்ற சமூகத்தின் உயிர் நாடியான அனைத்து துறைகளுக்கும் அன்றாடம் எவ்வளவு அவசியம் என்று தெரிந்தும் அதைத் தருவது பற்றி மத்திய அரசு கிஞ்சித்தும் கவலைப்படவில்லை.

இண்டர்நெட் சேவை என்பது மக்களின் அடிப்படை உரிமைகளான பேச்சுரிமை, எழுத்துரிமை போன்றவற்றோடு நெருக்கமான தொடர்பு கொண்டது. ஆகவேதான் 'அனுராதா பாசின்' என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். முதலாவதாக, சேவை முடக்குவதற்கான அரசு ஆணையை வெளியிடவும், இரண்டாவதாக, நாட்டின் பாதுகாப்புக்கும், இச்சேவை முடக்கத்திற்கும் தொடர்பு உண்டு என்பதை நிரூபிக்கும் எந்த சோதனை அடிப்படையிலான ஆதாரங்களும் இல்லாத போது நிறுத்தப் பட்டதற்கான காரணத்தை வெளியிடவும் நீதிமன்றம் முன் அவர் வைத்த வேண்டுகோள்கள். ஆணை ஏதும் இல்லாமல் சேவை முடக்கி மக்களின் உரிமைகளைப் பறித்தது ஏன் என வினவினார். உச்ச  நீதிமன்றம் ஐந்து மாதங்களை எடுத்துக் கொண்டு பிரச்சினை தீர்வுக்கான தெளிவான தீர்ப்பை தருவதற்குப் பதில், வழுக்கலான முடிவை அறிவித்தது. 'வார ஆய்வுக் குழு' ஒன்று போட்டு சேவை தருவது பற்றி பரிசீலிக்க ஆணையிட்டது. அரசின் பொறுப்பை சுட்டிக்காட்டி, முடக்கியதற்கான உத்தரவை வெளியிட அரசைப் பணிக்கவில்லை. முன்னேற்றம் ஏதும் இல்லை என்பதால் இரண்டாம் முறையாக, ஊடகத்துறையில் பணிபுரிபவர்கள் அமைப்பின் சார்பில் எட்டு மாதங்களாக 4G சேவை முடக்கப்பட்டிருப்பதை உச்ச நீதிமன்றத்திடம் சுட்டிக் காட்டினர். இம்முறை உச்ச நீதிமன்றம் மத்திய உள்துறை செயலாளர் தலைமையில் மூவர் குழுவை அமைத்து ஆராயச் சொல்லிவிட்டு தன் வேலையை முடித்துக் கொண்டது. யார் முடக்கினார்களோ, அவர்களையே ஆய்வு செய்யச் சொல்லிய வேடிக்கையைப் பற்றி என்ன சொல்வது? முன்னேற்றம் ஏதாவது வந்ததா? இன்று வரை 4G சேவை இல்லை. ஓராண்டு ஆகப் போகிறது. மீண்டும் அவர்களே உச்ச நீதிமன்றத்தை அணுகியதன் பின்  2G சேவை வரையறைகளோடு தரப்பட்டுள்ளது. ஆனால் தேவையைப் பூர்த்தி செய்யவில்லை. இப்போது ஆய்வுக்குழு அறிக்கையை 'மூடுறையில்' (Sealed Envelope) போட்டு நீதிமன்றம் முன் சமர்ப்பிப்பதாக சொல்லி இருக்கிறது. முடக்கப்பட்ட ஆணையை வெளியில் சொல்வதில் என்ன தடை? எண்பது இலட்சம் மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டதற்கான காரணத்தை சொல்ல விரும்பாத மத்திய அரசை நெறிப்படுத்துவதில் உச்ச நீதிமன்றம் தவறி இருக்கிறது. மக்களின் நீதித்துறை மீதான நம்பிக்கை சிதைந்து விட்டது என்பதை கவலையோடு பார்க்க வேண்டியிருக்கிறது. உச்ச நீதிமன்றமே இப்படி எனில் சொச்ச நீதிமன்றங்கள் என்ன செய்யும் என்ற அச்சம் எழுந்துள்ளது. எனவேதான் நீதித்துறை சீர்திருத்தங்கள் இன்றியமையாத ஒன்றாக மாறி உள்ளது.

சிறைகளின் மொத்தக் கொள்ளளவு 100% எனில், கைதிகளின் எண்ணிக்கை 116% முதல் 119% ஆக இருக்கிறது என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. விசாரணைக் கைதிகள் ஆண்டுக்கணக்கில் சிறையில் இருக்க வேண்டிய கொடுமை ஒரு புறம். ஆனால் எந்தக் குற்றமும் செய்யாமல், கைதிகளுக்கு சிறையில் பிறந்த குழந்தைகள் என்ன செய்தார்கள்? செய்யாத குற்றத்திற்காக தண்டனை அனுபவிக்க நேர்ந்த இக்குழந்தைகளின் எதிர்காலம்? இவர்களுக்கான நல்வாழ்வை உறுதிப் படுத்த முடியாதது நம் ஒவ்வொருவருக்கும் அவமானமன்றோ? காரணங்களை ஆய்வு செய்தால், இறுதி விடை, நீதிமன்றங்களுக்குத் தேவையான உள்கட்டமைப்பும், போதிய நீதியரசர்களும், வழக்குகளை விரைந்து முடிப்பதற்கான சூழ்நிலைகளும் என்பது தெரியவரும். நீதிமன்றங்களில் தேவைக்கேற்ற விசாரணை அறைகள் இல்லை. ஏறத்தாழ 5,000 அறைகள் பற்றாக்குறை இருப்பதாகச் சொல்லப்படுகிறது. மாவட்ட/ வட்ட நீதிமன்றங்களின் நீதியரசர் எண்ணிக்கை 17,891, உயர்நீதி மன்றங்களில் பணிபுரியும் நீதியரசர்கள் 676. உச்ச நீதி மன்றத்தில் 33. நிரந்தர பற்றாக்குறை விகிதம் 22% நவீன வசதிகள் இல்லாமலும், போதுமான நிதி ஒதுக்கீடு இல்லாததாலும் விரிவாக்க வேலைகள் தடைப்படுகின்றன. காவல் துறை செயல்பாடுகளில் உள்ள குளறுபடிகள், அரசியல் வாதிகளின் காவல்துறை தலையீடு மற்றும் சமூகத்தில் பணபலம் உள்ளவர்களின் செல்வாக்கு எல்லாம் நீதிமன்றங்களின் செயல்பாடுகளில் மறைமுகமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இவையும் இன்ன பிற காரணங்களும் வழக்கை முடிப்பதில் தேவையற்ற தாமதத்தை உருவாக்குகின்றன. 

'விதி' என்னும் நீதிக்கொள்கை பற்றி ஆய்வு செய்யும் மையம், முதன் முறையாக காவல்துறை, நீதிமன்றங்கள், சட்ட உதவி மற்றும் சிறைகள் பற்றிய ஒன்றிணைந்த ஆய்வறிக்கையை மத்திய அரசு முன் சமர்ப்பித்துள்ளது. அவ்வறிக்கை மீதான பரவலான விவாதங்களை நாடெங்கும் மக்கள் நல ஆர்வலர்கள் நடத்துவதும், பல்வேறு ஆக்கப்பூர்வமான முன்மொழிவுகளை மத்திய, மாநில அரசுக்குத் தெரிவிப்பதன் மூலம் நீதித்துறையில் சீர்திருத்தங்களைக் கொண்டு வர இடையறாது முயல வேண்டும். இந்நாட்டு குடிமக்கள் அனைவரது நலம் குறித்து அக்கறைப்படும் நம் ஒவ்வொருவரின் தலையாயக் கடமைகளுள் ஒன்றாகும்.

Justice delayed means Justice denied!