Thursday, January 14, 2021

 விஷ விருட்சம் RSS வேலையைத் துவங்கி விட்டது. ரஜனி தேறவில்லை என தெரிந்ததும் BJP, குருமூர்த்தி மூலமாக சசிகலாவைப் பயன்படுத்தத் துவங்கி விட்டது. வீடு தீப்பற்றி எரியும் போது, அணைப்பதற்கு கங்கை நீருக்காகக் காத்திருக்கக் கூடாது என அருண்சோரி சொன்னதை மேற்கோள் காட்டுகிறார் குருமூர்த்தி. அதாவது சசிகலா சாக்கடையாக இருந்தாலும் தீயை அணைக்க அவரையும் பயன்படுத்தலாம் என் ற வர்ணாசிரம வெறியனின் பேச்சு, அதிமுகவை உடைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது. ஓபிஎஸ் ஆதரவு நிலையை எடுத்து, அமமுக, பிஜேபி மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் என்ற கூட்டணி அமைவதற்கான முயற்சியில் RSS இறங்கி உள்ளது. எந்தக் கட்டத்திலும் இனி எப்போதும் பிஜேபி உடன் கூட்டணி இல்லை என உறுதியாக அறிவித்த மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழியில் ஆட்சி நடத்துவதாகச் சொல்லும் அதிமுகவின் ஒரு பகுதி துரோக வரலாற்றை எழுதப் போகிறதோ என்ற கவலை அனைவர் மனத்திலும் எழுந்துள்ளது. அதிமுகவா அல்லது திமுகவா என்பது அல்ல பிரச்சினை. தமிழர்கள் துரோகத்திற்கு விலை போகக்கூடாது என்பதே நமது கவலை.

No comments:

Post a Comment