Monday, July 27, 2020

               கடல்
ஆர்த்தெழுந் தென்ன?
ஆர்ப்பரிப்பில் பயனென்ன?
கூர்த்தமதி பெற்றநின்
சீர்த்திறமுன் நான்சிறியோன்.

பொங்குநுரை கரையெறிந்து
அலையலையாய் வந்தென்ன?
தங்குபுகழ் புரைதீர்நின்
சிந்தனைமுன் நான்வறியோன்.

                ஞானி

என்னைநீ பார்க்கின்றாய்
ஏதேதோ உரைக்கின்றாய்
கரைமணலை நனைக்கும்உன்
கரம்பட்டே சிலிர்க்கின்றேன்

ஓய்வுதுளியின்றி ஓலமிடுங்கடலே!
அலைபாயும் என்மனதின்
அழுங்குரலைக் கேட்டாயோ?
நிலைமாறித் தடுமாறும்
தமிழர்தம் நிலையெண்ணி
ஏங்குமென் முகம்பார்த்து
எள்ளல்நகை புரிந்தாயோ?

ஓங்காரமிடும் உனைப்போல்
பொங்கியெழும் வண்தமிழர் 
ஆங்காரம் கண்டலறும்
கணவாய்க் கூட்டத்தின்
கதைமுடித்த சேதிவரும்.

கதைமுடித்த சேதிவரும்
அந்நாளில் நீயிருப்பாய்!
அன்றுநான் சொன்னதெண்ணி
நெடுங்கடலே நீ சிரிப்பாய்!


கடலும் ஞானியும்- கற்பனை உரையாடல்.







































No comments:

Post a Comment